சென்னை மாநகர பகுதியில் உள்ள தண்டையார் பேட்டையில் பிரகாஷ் என்பவர் தனது மனைவி கௌரி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு ரேகா(35) என்ற மகள் உள்ளார். இவர் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார்.
சென்ற 14-ஆம் தேதி அன்று வடபழனி முருகன் ஆலயத்தில் ராஜாசேகரன் மற்றும் ரேகாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சென்ற 19-ஆம் தேதி ரேகா தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் அங்கிருந்த படியே வேலைக்கு சென்று வந்துள்ளார்.
ராஜசேகரன் தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து செல்ல ஞாயிற்றுக்கிழமை வருவதாக மாமனாரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.அன்றைய தினத்தில் ரேகாவின் பெற்றோர்கள் காய்கறி வாங்குவதற்கு மார்க்கெட் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் வீட்டில் தனிமையாக இருந்த மகள் ரேகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரேகாவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.