fbpx

ஷாக்.. இதுவரை இல்லாத புதிய உச்சம்.. ஒரே நாளில் ரூ.880 உயர்ந்த தங்கம் விலை…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.44,480-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்த நிலையில் அமெரிக்காவில் 2 வங்கிகள் திவாலானதை அடுத்து பாதுகாப்பு கருதி, முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.5,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.44,480-க்கு விற்பனையாகிறது.. இதே பொல் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.30 உயர்ந்து ரூ.74.40க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது…. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.74,400க்கு விற்பனையாகிறது.

கடந்த 10-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. ஆனால் 15-ம் தேதி மட்டும் தங்கம் விலை சற்று குறைந்தது.. இந்த நிலையில் இன்று இதுவரை இல்லாத புதிய உச்சமாக சவரனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது.. இதனால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. தங்கம் வரலாற்றில் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி ஒரு சவரன் ரூ.43,360-க்கு விற்றதே உச்சமாக இருந்தது.. கடந்த பிப்ரவரி 2-ம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.44,040-க்கு விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

ஆவணங்களை சரிபார்க்க முயன்ற எஸ்.ஐ..!! சரமாரியாக வெட்டி சாய்த்த இளநீர் வியாபாரி..!!

Sat Mar 18 , 2023
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் வெங்கட துர்கா பிரசாத் என்பவர் சிறிய ரக சரக்கு வாகனத்தில் இளநீர் விற்பனை செய்து வருகிறார். அவர் நேற்று இளநீர் விற்பனை செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த மோட்டார் வாகன துணை ஆய்வாளர் சின்ன ராவ் சிறிய ரக சரக்கு வாகனத்தின் ஆவணங்களை கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டனர். இந்நிலையில், வெங்கட […]

You May Like