fbpx

சந்திரயான் – 3 விண்கலம் எடுத்த புதிய புகைப்படம்..!! அடடே எப்படி இருக்கு பாருங்க..!! ட்விட்டரில் பகிர்ந்த இஸ்ரோ..!!

நிலவை நெருங்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் சந்திரயான்-3 விண்கலம், பூமியில் இருந்து கிளம்பும் போது எடுத்த புகைப்படத்தையும் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழையும் போது எடுத்த நிலவின் மேற்பரப்பு புகைப்படத்தையும் படம்பிடித்து அனுப்பியுள்ள நிலையில், இஸ்ரோ நிறுவனம் அதனை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.

உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14ஆம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, எல்.வி.எம்3 எம்4 (LVM3 M4) ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. சந்திராயன்-3 பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்து நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடர ஆரம்பித்த நிலையில், நிலவின் டிரான்ஸ்லூனார் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது.

இந்நிலையில், ஆகஸ்ட் 7ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் திட்டமிட்டபடி, முதற்கட்ட சுற்றுப்பாதை குறைப்பு வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. என்ஜின்களின் மறுசுழற்சி சந்திரனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக கொண்டு வந்து, 170 கிமீ x 4313 கிமீ. தொலைவில் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, சந்திரயான்-3 விண்கலத்தின் திட்டமிட்ட 2ஆம் கட்ட சுற்றுப்பாதையின் குறைப்பு நேற்று (ஆகஸ்ட் 9) வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.

ச்திட்டமிட்டபடி, முதற்கட்ட சுற்றுப்பாதை தூரத்தை குறைக்கும் பணிகள் வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், தற்போது 2ஆம் கட்ட சுற்றுப்பாதையின் குறைப்பு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் சுற்றுப்பாதையை மேலும் குறைப்பதற்கான அடுத்தகட்ட செயல்பாடு ஆகஸ்ட் 14, 2023 அன்று 11.30 முதல் 12.30 மணி வரை திட்டமிடப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தற்போது, சந்திரயான்-3 விண்கலம் அனுப்பப்பட்ட நாளில் லேண்டர் இமேஜர் (Lander Imager) கேமரா எடுத்த பூமியின் மேற்பரப்பு புகைப்படம் மற்றும் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் விண்கலம் நிலை நிறுத்தப்பட்டப்பின், Lander Horizontal Velocity Camera மூலம் எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பு புகைப்படங்களை இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Chella

Next Post

வெட்கமே இல்லையா..? ஓடாதீங்க.. நில்லுங்க..!! திமுகவினரை விளாசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

Thu Aug 10 , 2023
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது மதுரை எய்ம்ஸ் தொடர்பாக மத்திய நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது அவருக்கும், திமுக எம்பிகளுக்கும் இடையே வார்த்தை போர் வெடித்தது. இதையடுத்து, திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசின் திட்டங்கள் பற்றி விரிவாக பேசி வந்தார். அப்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவது தொடர்பாக திமுக எம்பி டிஆர் பாலு விமர்சனம் செய்தற்கு அவர் […]

You May Like