ஹரியானா மாநிலத்தில் பள்ளிக் கல்வி இயக்குனரகம் பள்ளி நேரத்தை மாற்றியுள்ளது. இந்த மாற்றம் டிசம்பர் 01, 2022 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி, ஒரே ஷிப்டில் இயங்கும் ஹரியானா பள்ளிகள் காலை 09:30 மணி முதல் மாலை 03:30 மணி வரையிலும், இரண்டு ஷிப்டுகளில் இயங்கும் பள்ளிகள் ஷிப்ட் 1 க்கு காலை 07:55 முதல் மதியம் 12:30 வரையிலும், ஷிப்ட் 2 க்கு 12 முதல் மாலை 05:15 வரை பள்ளிகள் இங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
ஹரியானா அரசின் தகவல், மக்கள் தொடர்பு மற்றும் மொழிகள் துறை இயக்குனரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பள்ளி நேரத்தை மாற்ற போவதாக தெரிவித்துள்ளது. அந்த ட்வீட்களில், “அரியானா அரசு டிசம்பர் 1 முதல் பள்ளிகளின் நேரத்தை அரசு மாற்றியுள்ளது. ஒற்றை ஷிப்ட் பள்ளிகளின் நேரம் காலை 09:30 முதல் மாலை 03:30 வரை இருக்கும். மறுபுறம், இரட்டை ஷிப்ட் பள்ளிகளில், நேரம் முதல் ஷிப்ட் காலை 07:55 முதல் மதியம் 12:30 வரையிலும், இரண்டாவது ஷிப்ட் மதியம் 12:40 முதல் மாலை 05:15 வரையிலும் இருக்கும் என கூறியுள்ளது.