fbpx

வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்!… டெபிட், கிரெடிட் கார்டுகள் மற்றும் பிற UPI பயன்பாடுகள் மூலம் வணிகங்களுக்கு பணம் செலுத்தலாம்!

வணிகத்தை மேம்படுத்தும் நோக்கில் டெபிட், கிரெடிட் கார்டுகள் மற்றும் பிற UPI பயன்பாடுகள் மூலம் வணிகங்களுக்கு பணம் செலுத்தும் புதிய அம்சங்களை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது.

UPI ஆப்ஸ், டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் மற்றும் நெட் பேங்கிங் மூலம் விரைவில் வாட்ஸ்அப்பில் பணம் செலுத்தலாம். Meta யின் மெசேஜிங் நிறுவனம் Razorpay மற்றும் PayU உடன் கூட்டு சேர்ந்துள்ளது. வாட்ஸ்அப் பிளாட்பார்மிலேயே ஷாப்பிங் செய்யும் வசதியை அதிகரிக்கும் நோக்கில் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 500 மில்லியன் பயனர்கள் உள்ளனர், இருப்பினும் சுமார் 100 மில்லியன் மக்கள் WhatsApp Pay பயன்படுத்துகின்றனர். இப்போதைக்கு, ஜியோமார்ட் மளிகை சேவை, சென்னையில் உள்ள மெட்ரோ அமைப்பு மற்றும் பெங்களூரில் உள்ள வாட்ஸ்அப் ஆகியவற்றில் எண்ட்-டு-எண்ட் ஷாப்பிங் அனுபவம் கிடைக்கிறது. இருப்பினும், இப்போது பல பேமன்ட் விருப்பங்கள் அதில் சேர்க்கப்பட்டுள்ளதால், இது பிளாட்ஃபார்மில் பிஸ்னஸ்களை மேம்படுத்துவதைக் குறிக்கிறது.

இதுதொடர்பாக மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மெட்டா நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க், எளிமை மற்றும் புதிய டூல்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் வணிகத்தில் தங்களது வாடிக்கையாளர்களை எளிதாக இணைப்பதற்கு வழிவகை செய்யும் என்றார். வாட்ஸ் அப் ஃப்ளோ என்ற புதிய டூல் மூலம் வாட்ஸ் அப் சேட் மூலமே பல வணிக நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள இயலும் விமான டிக்கெட் முன்பதிவு, உணவு ஆர்டர் போன்றவைகளை வெறும் சாட் திரெட் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வணிக நிறுவனங்கள் வழங்க முடியும் என்றும் மார்க் தெரிவித்தார்.

பேமெண்ட்ஸ், வாட்ஸ் அப் செயலி மூலமாகவே பணப்பரிமாற்றம் செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் சேட்டில் இருந்தே ஒரு பயனாளர் யாருக்கு வேண்டுமானாலும் பணத்தை அனுப்பும் வசதி இது. மெட்டா வெரிஃபிகேஷன் முத்திரையானது வணிக பயன்பாட்டுக்கான வாட்ஸ் அப் ஒரு முத்திரை வழங்கும். இவை வணிக நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில் அமையவுள்ளது.இது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறவும் பாதுகாப்பு அளிக்கவும் வகை செய்யும்.

Kokila

Next Post

செம அறிவிப்பு...! இனி இவர்கள் அனைவருக்கும் பட்டா எளிதாக கிடைக்கும்...! தமிழக அரசு முக்கிய தகவல்...

Thu Sep 21 , 2023
கிரைய பத்திரம் பெற்றுள்ள தொழிற்முனைவோர் எளிதில் பட்டா பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு வளர்ச்சி நிறுவனத்தின் கீழ் சிறுதொழில் 130 தொழிற்பேட்டைகள் மாநிலம் முழுவதும் இயங்கி வருகின்றன. இத்தொழிற்பேட்டையில் அமையப் பெற்றுள்ள பெரும்பாலான நிலம் சிட்கோ பெயரில் மாற்றப்படாமல் சர்க்கார் புறம்போக்கு என்றே வருவாய் ஆவணங்களில் உள்ளது. சுமார் 60 ஆண்டிற்கும் மேலாக இப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்ததன் காரணமாக, தொழிற்முனைவோர்களால் பட்டா பெற இயலவில்லை. இதனால் தொழிற்முனைவோர் தங்களது தொழிலை […]

You May Like