fbpx

குளிக்கச் சென்ற “புது மாப்பிள்ளை” பலி காணும் பொங்கலில் சோகம்.! காவல்துறை தீவிர விசாரணை.!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் பகுதியைச் சேர்ந்த புது மாப்பிள்ளை குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது . இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியை அடுத்த சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் துரை. இவரது மகன் மணிகண்டன்(23) ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோடீஸ்வரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று மாலை அங்குள்ள குளத்தில் குளிக்க சென்றதாக தெரிகிறது.

மணிகண்டன் குளத்தின் ஆழமான பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது களிமண் சேற்றில் சிக்கியிருக்கிறார். இதன் காரணமாக அவரால் நீரிலிருந்து உடனடியாக வெளியேற முடியவில்லை. இதனால் நீருக்குள் மூழ்கி மூச்சுத் திணறி உயிரிழந்திருக்கிறார் மணிகண்டன். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் காவல்துறை உதவி ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதனையடுத்து இறந்த மணிகண்டனின் உடல் குளத்தில் இருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் . திருமணமான 6 மாதத்தில் புது மாப்பிள்ளை நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது .

Next Post

மஞ்சள் காமாலையை சரி செய்யும் பாகற்காய்.! வேறு என்னென்ன நோய்களை தீர்க்கும் தெரியுமா.!?

Thu Jan 18 , 2024
பாகற்காயில் உள்ள அதிகப்படியான கசப்பு சுவையின் காரணமாக இதை பலரும் உணவில் சேர்த்துக் கொள்வதில்லை. ஆனால் பாகற்காயில் பல்வேறு வகையான சத்துக்களும், நோயை தீர்க்கும் ஆற்றலும் இருக்கிறது என்று வல்லுநர்கள் கூறி வருகின்றனர். பாகற்காய் உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பதை குறித்து பார்க்கலாம். 1. பாகற்காயை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை வடிகட்டி குடித்து வந்தால் மஞ்சள் காமாலை நோய் சரியாகும்.2. இதை […]

You May Like