மத்திய பிரதேசம் மாநிலம் சத்னா மாவட்டத்தில் சித்தரகூட் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதிக்கு அருகே இருக்கின்ற பருந்த கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி தன்னுடைய தாயுடன் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதே ஊரில் சிறுமியின் நண்பரான மனோஜ் யாதவ் என்பவர் இருந்துள்ளார். இவர் சிறுமியின் குடும்பத்திற்கும் நன்கு அறிமுகமானவர் என்று கூறப்படுகிறது.
இத்தகைய நிலையில், சம்பவம் நடந்த கடந்த 5ம் தேதி அன்று சிகிச்சை முடிந்து நேரமாகிவிட்டதால் கிராமத்திற்கு திரும்பாமல் மனோஜ் வீட்டிலேயே சிறுமியும், அவருடைய தாயாரும் தங்க முயற்சி செய்தனர். அதன் பிறகு இரவு மனோஜ் மற்றும் சிறுமியிடம் ஆசை வார்த்தை தெரிவித்து தனியாக மந்தாகினி நதி கரைக்கு அழைத்துச் சென்று அவரிடம் ஆத்து மீறி இருக்கின்றார் அப்போது அந்த பகுதியில் வசிக்கும் மனோஜை நன்கு அறிந்த 5 இளைஞர்கள் வந்துள்ளனர். இவர்களின் செயல்களை கவனித்த அவர்கள் இடைமறித்து தாக்கி இருவரையும் படகில் கடத்திச் சென்றுள்ளனர்.
அந்தப் படகை நதிக்கரைக்கு கொண்டு சென்று ஐவரும் இணைந்து அந்த பகுதியில் வைத்து சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். அதன் பிறகு அதிகாலை வேலையில் சிறுமியை விட்டு, விட்டு தப்பி சென்று விட்டனர். சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தாயிடம் கூறியதால் காவல் நிலையத்தில் அவர் புகார் வழங்கினார்.
இந்த புகாரின் அடிப்படையில் சிறுமியின் நண்பர் மனோஜ் யாதவ் மற்றும் மற்ற 5 பேரான வினோத், நிஷாத், ராம் கோபால், மோஹித், நிஷாத், பங்கஜ் ஜோஷி, சந்தோஷ், புஷ்வாஹா உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது