fbpx

தமிழகத்தில் முறையான அனுமதி பெறாமல் இத்தனை பெண்கள் விடுதிகள் செயல்படுகிறதா……?

தமிழ்நாடு விடுதிகள் மற்றும் வீடுகள் சட்டம் 2014-ன் அடிப்படையில் அனைத்து பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகளும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறையான அனுமதி பெற வேண்டும்.

இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழகத்தில் இருக்கின்ற 1748 பெண்கள் தங்கும் விடுதிகளில், 1,115 விடுதிகள் அனுமதி இல்லாமல் செயல்படுவதாக கூறப்பட்டுள்ளது.

சென்னையில் இருக்கின்ற 714 பெண்கள் தங்கும் விடுதிகளில் 31 விடுதிகள் மட்டுமே இதற்கான முறையான அனுமதியை பெற்றிருப்பதாகவும், சென்னையில் மட்டும் 683 பெண்கள் தங்கும் விடுதிகள் சரியான அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருவதாகவும் கூறப்பட்டிருக்கிறது. இது போன்ற பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு ஒற்றை சாரள முறை அனுமதியை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று விடுதி அமைப்பாளர்கள் அரசுக்கு கோரிக்கைவிடுத்து இருக்கிறார்கள்.

சென்னைக்கு அடுத்தபடியாக திருப்பூரில் 113 விடுதிகள் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. இது குறித்து தமிழக முழுவதும் இருக்கின்ற 873 பெண்கள் தங்கும் விடுதிகளுக்கு சமூக நலத்துறை இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. கடந்த 10 வருடங்களில் தமிழ்நாடு முழுவதிலும் 379 பெண்கள் தங்கும் விடுதிகள் மூடப்பட்டிருப்பதாக ஆர்டிஐ தகவல் மூலம் தெரிய வந்திருக்கிறது.

Next Post

ஜாக்கிரதை.. மகளிர் தின பரிசு மோசடி.. போலி செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்..

Tue Mar 7 , 2023
எந்தளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதோ, அதே அளவுக்கு சைபர் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் மோசடி செய்வது இப்போது வாடிக்கையாகி விட்டது. இலவச பொருட்கள் தருவதாகவும், இந்த லிங்க்-ஐ கிளிக் செய்தால் பணம் மற்றும் பரிசுகள் கிடைக்கும் என்பது போன்ற பல போலி செய்திகள் வாட்ஸ் ஆப்-ல் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் தற்போது ஒரு செய்தி வலம் வருகிறது.. சர்வதேச மகளிர் தினத்தை […]

You May Like