fbpx

தமிழகத்தில் 35 டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம்.! டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு.! விபரங்கள் என்ன.?

காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றங்கள் செய்யப்படுவது நடைமுறையில் உள்ள ஒன்று. இந்நிலையில் 35 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் உத்தரவில் அதிகாரிகளின் பணியிட மாற்றங்களை தெரிவித்திருக்கிறார். தாம்பரம் உதவி காவல் ஆணையாளராக பணியாற்றிய காவல்துறை அதிகாரி சீனிவாசன் சைதாப்பேட்டை காவல்துறை உதவி ஆணையாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த அதிகாரி அசோக் செல்வன் தாம்பரம் போக்குவரத்து காவல்துறைக்கு உதவியாளையாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

மேலும் சென்னை மத்திய பிரிவில் குற்றப்பிரிவு உதவி ஆணையாளராக பணியாற்றி வந்த மோகன் திட்டக்குடி மற்றும் கடலூர் காவல்துறைக்கு உதவியாளையாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இவை தவிர முருகேசன் என்பவர் சோலையூர் காவல்துறை உதவி ஆணையாளராக பணியாற்றி வந்த நிலையில் தற்போது அவர் அடையார் காவல்துறைக்கு உதவியானையாளராக மாற்றப்பட்டு இருக்கிறார்.

Next Post

தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் காலமானார்...! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்...!

Mon Dec 25 , 2023
தமிழக முன்னாள் தலைமைச் செயலாளரும், ஒடிசா முன்னாள் ஆளுநருமான எம்.எம்.ராஜேந்திரனின் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவருக்கு வயது 88. 1957 ஐஏஎஸ் பேட்ச் அதிகாரியான ராஜேந்திரன், துணை ஆட்சியர் எனப் பல்வேறு பதவிகளை வகித்து, பின்னர் ராமநாதபுரம் கலெக்டராகப் பதவியேற்றார். அவர் 1964 இல் தனுஷ்கோடியில் குற்றச்சம்பவத்தில் ஈடுபடும் அவர்களை தனது கட்டுக்குள் கொண்டு வந்தார். இந்த அனுபவம் 1999 ல் ஒடிசாவில் புயல் சூழ்நிலையை […]

You May Like