fbpx

ஒரே நாளில் 4 தேர்வு முடிவுகள்…..! டி.என்.பி.எஸ்.சி அதிரடி…..!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் சென்ற வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற குரூப்1 முதல் நிலை தேர்வு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை நிருபர் தேர்வு, மீன்துறை ஆய்வாளர் தேர்வு, சென்ற பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற சுகாதார அலுவலர் தேர்வு உள்ளிட்ட 4 போட்டி தேர்வுகளின் முடிவுகளையும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.

இந்த நிலையில், அடுத்த கட்ட தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவு எண்கள் கொண்ட பட்டியலை தேர்வாணையத்தின்www.tnpsc.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.

வருடம் தோறும் தேர்வு கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள படி தேர்வு முடிவுகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு வெளியிட வேண்டும் அதிலும் குறிப்பாக கணினி வழியில் நடத்தப்படும் தேர்வுகளின் முடிவுகளை ஒரே மாதத்தில் வெளியிட வேண்டும் என்று தேர்வர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்

Next Post

12 மணி நேர வேலை சட்டமசோதா வாபஸ்..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு..!!

Mon May 1 , 2023
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை எனும் தொழிலாளர் சட்டமசோதா நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த சட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள மே தினப் பூங்காவில் உள்ள மே நினைவு சின்னத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை […]
12 மணி நேர வேலை சட்டமசோதா வாபஸ்..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு..!!

You May Like