தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் சென்ற வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற குரூப்1 முதல் நிலை தேர்வு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை நிருபர் தேர்வு, மீன்துறை ஆய்வாளர் தேர்வு, சென்ற பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற சுகாதார அலுவலர் தேர்வு உள்ளிட்ட 4 போட்டி தேர்வுகளின் முடிவுகளையும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.
இந்த நிலையில், அடுத்த கட்ட தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவு எண்கள் கொண்ட பட்டியலை தேர்வாணையத்தின்www.tnpsc.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.
வருடம் தோறும் தேர்வு கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள படி தேர்வு முடிவுகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு வெளியிட வேண்டும் அதிலும் குறிப்பாக கணினி வழியில் நடத்தப்படும் தேர்வுகளின் முடிவுகளை ஒரே மாதத்தில் வெளியிட வேண்டும் என்று தேர்வர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்