சென்னை மணலி பகுதி ஹரிகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்தவர் ரவிசங்கர். இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் ராஜஸ்ரீ(15) இவர் மணலி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் தான் தற்சமயம் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. கணித தேர்வுக்கு நன்றாக படிக்குமாறு மகளிடம் தெரிவித்து விட்டு பெற்றோர் வெளியே சென்று விட்டனர்.
ஆனால் கணிதப் பாடம் ராஜஸ்ரீக்கு சரியாக வராது என்று சொல்லப்படுகிறது. ஆகவே பெற்றோர் வீட்டில் இல்லாத சமயமாக பார்த்து அறையில் இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து உடல் மீது ஊற்றி அவர் தீ வைத்துக் கொளுத்திக் கொண்டார்.
அதோடு, தீயின் சூடு தாங்க முடியாமல் அலறிய மாணவியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அவசர ஊர்தியின் மூலமாக அனுப்பி வைத்தனர். அங்கே சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், அந்த மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயர்ந்தார் இந்த சம்பவம் தொடர்பாக மணலி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாணவியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றன.