fbpx

கள்ளக்குறிச்சி அருகே 35 வயது பெண் முற்பட 3 பேர் கழுத்தறுத்து கொலை…..! நடந்தது என்ன…..!

கள்ளக்குறிச்சி நரிமேடு சேர்ந்தவர் வளர்மதி (35) இவருடைய கணவர் 10 மாதங்களுக்கு முன்னர் விபத்தில் மரணமடைந்தார். எத்தகைய சூழ்நிலையில் வளர்மதி தன்னுடைய 11 வயது மகன் தமிழரசன் மற்றும் 8 மாத கைக்குழந்தை கேசவன் உள்ளிட்டோருடன் தனியாக வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

அதோடு வளர்மதி ஆட்டோ மூலமாக காய்கறி வியாபாரமும் செய்து வந்தார் என்று சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில் வளர்மதி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது இதனால் அக்கம் பக்கத்தினர் சந்தேகத்தின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

ஆகவே கள்ளக்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அங்கே வளர்மதி மற்றும் அவருடைய 11 வயது மகன் தமிழரசன் 8 மாத கைக்குழந்தை கேசவன் போன்றோர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தனர்.

இதனை அடுத்து மூவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மோகன்ராஜ் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இத்தகைய நிலையில் விழுப்புரம் சரக டிஐஜி பொறுப்பு பகலவன் இன்று விசாரணை நடத்தி வருகின்றார்.

Next Post

அதிர்ச்சி……! மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி டெல்லியில் பரபரப்பு….!

Thu Apr 20 , 2023
உத்தரப்பிரதேச மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ராஜ்நாத் சிங் உத்தரபிரதேச மாநிலத்தில் பலமுறை முதலமைச்சராக இருந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று அப்போது உள்துறை அமைச்சர் என்ற மிகப் பெரிய பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மிகப்பெரிய […]

You May Like