மும்பையின் போவாய் பகுதியில் உள்ள ஃபில்டர்படா பகுதியில், ரம்ஜான் ஷேக் என்பவரும் 32 வயதுடைய பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமலேயே, ஒரு வருடமாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக இருந்தனர். இந்நிலையில் ரம்ஜான் ஷேக் திருமணம் செய்வதை தாமதப்படுத்தி வந்துள்ளார். இதனால் ஸொரா ஷா என்ற அந்த பெண் ஆத்திரமடைந்துள்ளார்.
இந்நிலையில், ரம்ஜான் ஷேக் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க போவதாக, ரம்ஜான் ஷேக்கிடம் அந்தப் பெண் கூறினார். ஆட்டோ டிரைவரான ரம்ஜான் ஷேக் காவல் நிலையம் செல்லும் வழியிலேயே, வர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸொரா ஷா, அவரது துப்பட்டாவால் ரம்ஜான் ஷேக் கழுத்தை இறுக்கி நெரித்துள்ளார்.
இதனால் நிலைகுலைந்து போன ரம்ஜான் ஷேக், அங்கேயே உயிரிழந்தார். அதன் பிறகு அந்த பெண் ஆரே பகுதி காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். தகவல் அறிந்ததும் காவல்துறையினர், இறந்தவரின் உடலை உடல்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு வழக்கு பதிவு செய்து ஸொரா ஷாவை கைது செய்தனர்.