fbpx

கல்யாணம் செய்ய தாமதித்த காதலன்; துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்ற காதலி… பயங்கரம்..!

மும்பையின் போவாய் பகுதியில் உள்ள ஃபில்டர்படா பகுதியில், ரம்ஜான் ஷேக் என்பவரும் 32 வயதுடைய பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமலேயே, ஒரு வருடமாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக இருந்தனர். இந்நிலையில் ரம்ஜான் ஷேக் திருமணம் செய்வதை தாமதப்படுத்தி வந்துள்ளார். இதனால் ஸொரா ஷா என்ற அந்த பெண் ஆத்திரமடைந்துள்ளார்.

இந்நிலையில், ரம்ஜான் ஷேக் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க போவதாக, ரம்ஜான் ஷேக்கிடம் அந்தப் பெண் கூறினார். ஆட்டோ டிரைவரான ரம்ஜான் ஷேக் காவல் நிலையம் செல்லும் வழியிலேயே, வர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸொரா ஷா, அவரது துப்பட்டாவால் ரம்ஜான் ஷேக் கழுத்தை இறுக்கி நெரித்துள்ளார்.

இதனால் நிலைகுலைந்து போன ரம்ஜான் ஷேக், அங்கேயே உயிரிழந்தார். அதன் பிறகு அந்த பெண் ஆரே பகுதி காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். தகவல் அறிந்ததும் காவல்துறையினர், இறந்தவரின் உடலை உடல்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு வழக்கு பதிவு செய்து ஸொரா ஷாவை கைது செய்தனர்.

Baskar

Next Post

”நிர்வாகிகள் அனைவரும் கோவில்களுக்கு குடும்பத்துடன் செல்லுங்கள்”..! - சீமான் அதிரடி

Sun Aug 28 , 2022
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள், இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள முதன்மை கோவில்களுக்கு குடும்பத்துடன் சென்று தமிழில் வழிபாடு செய்ய வைக்க வேண்டும் என சீமான் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்னைத் தமிழில் அர்ச்சனை என்ற பெயரில் தமிழக அரசு சென்ற ஆண்டு ஒரு திட்டத்தை அறிவித்தது. அதன்படி, இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்துக் கோவில்களிலும் தமிழில் […]
’இனி அரசுக்கே இடம் தேவையென்றால் ஜி-ஸ்கொயர் நிறுவனத்திடம்தான் வாங்க வேண்டும்’..! சீமான் விமர்சனம்

You May Like