fbpx

கடப்பாரையால் கொடூரமாக தாக்கி வாலிபர் கொலை… போதையில் இருந்ததால் நடந்த பரிதாபம்..!

குமரி மாவட்டம் கொட்டாரம் அச்சன்குளம் ஓடைத்தெருவில் வசித்து வருபவர் விவசாயி ராமகிருஷ்ணன் (52). இவரது மனைவி ராஜாத்தி(42). இவர்களுக்கு அரவிந்த்ராஜா(24), சுரேஷ்ராஜா( 22) என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் அரவிந்த்ராஜா பி.ஏ. முடித்து உள்ளார். அதேபோல இவரது இளைய மகன் சுரேஷ்ராஜாவும் பி.ஏ. முடித்துவிட்டு அடுத்த மாதம் வேலைக்காக வெளிநாட்டுக்கு செல்ல இருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு சுமார் 12 மணி அளவில் அச்சன்குளம் மங்கம்மாள் சாலையில் வைத்து இளையமகன் சுரேஷ்ராஜாவுக்கும் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் செந்தில்குமார் மகன் சாம்சன்மனோ(18) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மதுபோதையில் கால்வாயில் விழுந்து கிடந்த சுரேஷ்ராஜாவை, சாம்சன்மனோ கடப்பாறையால் தலையில் சரமரியாக அடித்துள்ளார். இதில் சுரேஷ்ராஜா அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுரேஷ்ராஜாவின் உடலை மீட்டு ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும், கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலை செய்த சாம்சன்மனோவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Baskar

Next Post

”அதிமுக நிர்வாகிகள் இனியாவது நல்ல முடிவை எடுக்க வேண்டும்”..! - பொன்.ராதாகிருஷ்ணன்

Wed Aug 17 , 2022
திமுகவை நாங்கள் சமரசத்திற்கு அழைக்கவில்லை என்றும் நாங்கள் திமுகவோடு சமரசத்திற்கு செல்லவில்லை என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, “அதிமுக வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்க வேண்டும். இந்த தீர்ப்புக்கு பிறகாவது அதிமுக நிர்வாகிகள் சிந்தித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட இந்த கட்சி […]
”அதிமுக நிர்வாகிகள் இனியாவது நல்ல முடிவை எடுக்க வேண்டும்”..! - பொன்.ராதாகிருஷ்ணன்

You May Like