ஆனைமலையை அடுத்த திவான்சாபுதூர் மதுரைவீரன் கோவில் வீதியில் வசித்து வரும் செல்வராஜ் என்பவரது மகன் தீனதயாளன்(22). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று அங்கிருக்கும் பல்நோக்கு மையம் அருகில் பொது இடத்தில் கையில் பட்டா கத்தியுடன் நின்று கொண்டு அந்த வழியாக போவோர், வருவோரை தகாத வார்தைகளால் திட்டி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதை கண்ட அதே பகுதிைய சேர்ந்த மகேஸ்வரி(33) என்பவர், அவரை பொது இடத்தில் நின்று தகராறு செய்வது தவறு என்று கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தீனதயாளன், மகேஸ்வரியை திடீரென கையால் தாக்கினார். இதை கண்ட அங்கிருந்த பொதுமக்கள், அவரை பிடிக்க அங்கு ஓடி வந்தனர்.
உடனே அவர்களிடம் பட்டா கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு தீனதயாளன் தப்பி சென்றார். அப்போது பட்டா கத்தியை அங்கேயே தவறவிட்டு சென்றார். இதுகுறித்து ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தீனதயாளனை கைது செய்தனர்.