fbpx

5 மாத கர்ப்பிணியை எரித்த கணவர் குடும்பம்.! அரியலூரில் பரபரப்பு.!

அரியலூர் மாவட்ட பகுதியில் உள்ள கிராமத்தில் விஜய் பிரகாஷ் மற்றும் காதல் மனைவி அபிராமி மற்றும் இருவரும் தங்களது ஒன்றரை வயது மகனுடன் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த சூழலில் அபிராமி இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார்.

5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கடந்த 3-ம் தேதி வீட்டில் சமைக்க மீன் கழுவிய போது தண்ணீரில் மகன் விளையாடியுள்ளான் அதற்காக அவனை அடித்தாக கூறப்படுகிறது. இதனால் கணவன் அபிராமியை அடித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அபிராமி மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு உடம்பில் தீ வைத்துக் கொண்டுள்ளார். 95 சதவீதம் தீக்காயத்துடன் அபிராமி உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுள்ளார். அபிராமி அம்மாவிடம் நடந்ததை கூறியுள்ளார். இதையடுத்து அபிராமியின் அம்மா போலீசாரிடம் அபிராமியின் வாக்கு மூலத்தை கூறினார்.

வாக்குமூலத்தில் மாமனார் கலியமூர்த்தி அபிராமி மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளார். உடல் எரிந்ததை பார்த்த கணவன் சாக்கை எடுத்து அபிராமி மீது போட்டு தீயை அணைத்துள்ளார் என்று வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.மேலும் அவர் அளித்த புகாரின் பேரில் கணவர்,மாமியார் மற்றும் மாமனார் மற்றும் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rupa

Next Post

அமெரிக்க துணை கவர்னராக இந்திய பெண் வெற்றி.!

Fri Nov 11 , 2022
அமெரிக்காவில் வசிக்கும் அருணா மில்லர் 6 நவம்பர் 1964 நாள் அன்று ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்து, தன்னுடைய ஏழு வயதில் பெற்றோருடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்ததாக தெரிய வந்ததுள்ளது. இந்த நிலையில் 1989 ஆம் ஆண்டு மிசோரி என்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இவர் சிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்கிறார். அத்துடன் மாண்ட்கோமெரி கவுண்டி பகுதியில் உள்ளூர் போக்குவரத்துத் துறையில் சுமார் 25 ஆண்டுகள் பணியாற்றி வந்துள்ளார். தற்போது 58 […]

You May Like