நாடு முழுவதும் சமீப காலமாக நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது இதன் காரணமாக, மாநில அரசுகள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டது. ஆனால் தமிழகத்தில் இந்த நோய் தொற்று கட்டுப்பாட்டில் இருப்பதாக மாநில அரசு மெத்தனமாக செயல்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, இந்த நோய் தொற்று பாதிப்பால் ஆங்காங்கே உயிர் பலியும் நிகழ்கிறது. ஆகவே இனி வரும் காலங்களிலாவது மாநில அரசு மத்திய அரசின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த நிலையில் தான் நாட்டில் நோய் தொற்று பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது என்று கூறப்படுகிறது. நேற்று 7,830 ஆக இருந்த நோய் தொற்று பாதிப்பு இன்று 10,158 ஆக அதிகரித்து இருக்கிறது. இதன் மூலமாக நோய் தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 44,498 என்று அதிகரித்துள்ளது.
இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, இரவு நேர ஊரடங்கு, மற்றும் work from home என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மிக விரைவில் ஆலோசிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.