தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில், பொறியியல் கலந்தாய்வு ஜூலை மாதம் 2ம் தேதி ஆரம்பமாகும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருக்கிறார்.
ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சிபிஎஸ்இ மாநில கல்வி 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டதால் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே பொறியியல் கலந்தாய்வு ஆரம்பமாகிறது. பாலிடெக்னிக் தொழில்நுட்ப படிப்பில் சேர்வதற்கு நாளை முதல் விண்ணப்பம் செய்யலாம் என்றும் அமைச்சர் பொன்முடி அறிவித்திருக்கிறார்.