காரைக்கால் பெரமசாமி பிள்ளை வீதியில் கைலாஷ் என்ற நபர் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் சென்ற 11ஆம் தேதி தேதி நகைகளை விற்பனை செய்ய முயற்சி செய்தது தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் ஜெரோம் ஜெஸ்மாண்ட் உள்ளிட்ட 5️ பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்கள்.
காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இவர்களுக்கு காரைக்கால் பகுதியில் உள்ள புதுவை பாரதியார் கிராம வங்கியில் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் போலி நகைகள் அடகு வைக்கப்பட்ட வழக்கிலும் தொடர்பு இருக்கிறது. என்ற விவரம் இந்த விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கில் ஜெரோம் ஜெஸ்மாண்டின் நண்பரும், காரைக்கால் அம்மாள் சத்திரம் தொகுதியைச் சேர்ந்த தொழிலதிபருமான புவனேஸ்வரி (40) என்ற நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
காவல்துறையினர் தன்னை தேடுவதை தெரிந்து கொண்ட அவர், விஜயவாடா அருகே உள்ள ஒரு சொகுசு விடுதியில் தலைமுறைவாக தங்கி இருந்தார். இதனை அறிந்து கொண்ட தமிழக காவல்துறையினர் அவரை நேற்று கைது செய்து காரைக்காலுக்கு அழைத்து வந்தனர். இந்த கும்பல் வங்கிகள், நிதி நிறுவனங்கள், அடகு கடைகள் போன்றவற்றில் போலி நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.