fbpx

சில்லென ஒரு மழைத்துளி….! சென்னையில் பெய்த சாரல் மழையால் பொதுமக்கள் குதூகலம்….!

தமிழகத்தில் கோடை வெப்பம் பொதுமக்களை வெகுவாக பாதித்து வருகின்ற நிலையில், பொதுமக்களை மகிழ்விக்கும் விதமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் பல்வேறு மாற்று வழிமுறைகளை தேடி வெப்பத்தை பொதுமக்கள் சமாளித்து வருகிறார்கள்.

அதோடு தலைநகர் சென்னையில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், இரவில் லேசான தூறல் மழை பெய்தது சென்னையில் காலையிலிருந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, வேளச்சேரி, ஆலந்தூர், மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக, வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது ஆகவே பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூர் கோவை வால்பாறையில் தலா 7 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.

Next Post

போதையில் தாக்கிய கணவரை கம்பியால் குத்தி கொலை செய்த மனைவி கைது…..! வத்தலகுண்டு அருகே பரபரப்பு….!

Mon May 1 , 2023
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே தெற்கு விராலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி வீரையன் (35) இவர் வெல்டிங் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி அபிராமி(25). இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில், வீரய்யன் நேற்று இரவு தன்னுடைய வீட்டின் முன்பு ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்த வத்தலகுண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் வீரய்யனை அவருடைய மனைவி தான் […]

You May Like