சென்னை பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் என்ற திலீப்குமார் இவர் தன்னுடைய மனைவி ஹேமலதா அவர்களுடைய 2½ வயது பெண் குழந்தை ஹாசினி உள்ளிட்டோருடன் கடந்த 6 மாதங்களாக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அண்ணா நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில், சக்திவேல் காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்ததாகவும், ஹேமலதா ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் இந்த தம்பதியினர் அனுமதித்திருக்கின்றனர்.
குழந்தை சுயநினைவு இல்லாமல் காணப்பட்டதால், அந்த மருத்துவமனையில் அந்த குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது. அதன் பிறகு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பெற்றோர் இருவரும் மருத்துவமனையில் குழந்தை உடன் இருந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் திடீரென்று இருவரும் தலைமறைவாகி விட்டனர். இதற்கு நடுவே சிகிச்சை பலனின்றி குழந்தை ஹாசினி பரிதாபமாக உயிரிழந்தது.
இது தொடர்பாக ஆலங்குளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சக்திவேல் மது குடித்துவிட்டு வந்து அவ்வப்போது தகராறு ஈடுபட்டதும் சம்பவம் நடைபெற்ற அன்று குழந்தையுடன் வீட்டிலிருந்து சக்திவேல் குழந்தையை சுவரில் தூக்கி வீசியதும், இதன் காரணமாக, குழந்தை ஹாசினி மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டதாக தெரிவித்து மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்ததும் தெரியவந்தது.