fbpx

போதைப்பொருள் கடத்தலில் தொடர்பா…..? திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் மகனுடன் அதிரடி கைது…..!

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள விழுந்தமாவாடியை சேர்ந்த புல்லட் மகாலிங்கம் என்கின்ற மகாலிங்கம். (56) திமுகவைச் சார்ந்த இவர் விழுந்தமாவடி ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவருடைய மகன் அலெக்ஸ் (31) கீழையூர் ஒன்றிய குழு திமுகவின் உறுப்பினராக உள்ளார்.

இத்தகைய நிலையில், தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் நாகப்பட்டினம் காவல்துறை கண்காணிப்பாளர் ஜவஹருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் விழுந்தமாவாடியில் உள்ள மகாலிங்கம் வீட்டில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். ஆனால் அவருடைய வீட்டில் இருந்து எதுவும் கைப்பற்ற படவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனாலும் மகாலிங்கம் மற்றும் அவருடைய மகன் அலெக்ஸ் உள்ளிட்டோரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பிறகு அவர்களை காவல் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று சென்னையிலிருந்து கடலூருக்கு வந்திருந்த தேசிய போதை பொருள் தடுப்பு காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதவது தலைநகர் டெல்லியில் தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் ஒரு காரில் இருந்து ஐஸ் மச்சா என்ற போதை பொருளை சமீபத்தில் பறிமுதல் செய்தனர் அந்த கார் ஓட்டுநர்களிடம் விசாரணை நடத்திய போது அந்த ஓட்டுனர் அந்த போதை பொருளை நாகை மாவட்டம் விழுந்தமாவடி ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கத்திடம் ஒப்படைக்க உள்ளதாக கூறி இருக்கிறார்.

ஆகவேதான் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், மகாலிங்கம் மற்றும் அவருடைய மகன் அலெக்ஸ் உள்ளிட்டோரை கைது செய்து அவர்களிடம் ஒப்படைத்து இருக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

Next Post

அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு...! மாதம் ரூ.20,000 ஊதியம்...! உடனே விண்ணப்பிக்கவும்...!

Wed May 10 , 2023
இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள Hostel Warden, Cook ஆகிய பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என இரண்டு காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு 45 ஆகும். மேலும் பணிக்கு தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பணிக்கு நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்களுக்கு […]

You May Like