தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கல்வி பணியை முன்னேற்றம் அடைய வைக்கும் விதத்தில், ஆண்டுதோறும் மாவட்டத்தில் 3 சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து மாவட்ட வாரியாக சுழல் கேடயங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த இடத்தில் 2021 22 ஆம் கல்வி ஆண்டில் சுமார் 114 பள்ளிகளுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில், இந்த கல்வியாண்டில் ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் 3 சிறந்த அரசு பள்ளிகளை தேர்வு செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக்கல்வி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு பள்ளிகளை முன்னேற்றம் அடைய வைக்கும் விதத்தில் ஒவ்வொரு வருடமும் மாவட்டத்தில் உள்ள 3 சிறந்த அரசு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி இந்த கல்வியாண்டின் சிறந்த பள்ளிகளின் பட்டியலை தயார் செய்து வரும் 26 ஆம் தேதிக்குள் அனுப்புமாறு கூறப்பட்டுள்ளது.