fbpx

வரதட்சணை கொடுமை; இளம் பெண் அளித்த புகார்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

பெங்களூரு பசவனகுடியைச் சேர்ந்த சந்தீப் என்பவருக்கு கடந்த வருடம், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். இந்த திருமணம் ஆடம்பரமாக நடந்துள்ளது. பெண்ணின் தந்தை ஆறு கோடி ரூபாய் திருமணத்திற்கு செலவு செய்ததாக கூறுகின்றனர். மேலும் மாப்பிள்ளை சந்தீப்புக்கு திருமணத்தின்போது 200 கிலோ வெள்ளி, நாலு கிலோ தங்கம், 55 லட்சம் மதிப்புள்ள காரையும் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

இவ்வளவு செய்தும் திருமணத்திற்கு பிறகு மேலும் வரதட்சணை கேட்டு கணவர் சந்தீப்பும் அவரது பெற்றோரும் அந்த பெண்ணை கொடுமை படுத்தியுள்ளனர். இந்நிலையில் வாய் வார்த்தையால் திட்டுவது மட்டுமல்லாமல் குடித்து விட்டு வந்து அந்த பெண்ணின் தலையில் சிறுநீர் கழிப்பதுள்ளார். மேலும் நடக்கும் கொடுமையை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதை தொடர்ந்து அந்த பெண் பெங்களூரு பசவனகுடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சந்தீப் மற்றும் அவரது பெற்றோர் மீது பசவனகுடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rupa

Next Post

”கள்ளக்குறிச்சி சம்பவத்தால் பள்ளிக்கல்வித்துறைக்கு அவப்பெயர்”..! - அமைச்சர் அன்பில் மகேஷ் காட்டம்..!

Fri Aug 12 , 2022
கள்ளக்குறிச்சி சம்பவத்தால் பள்ளிக்கல்வித்துறைக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சார்ந்த பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நெய்வேலியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ”தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சிஇஓ, டிஇஓ ஆகியோர் தங்கள் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நேரடியாக சென்று அடிக்கடி ஆய்வுகள் நடத்த வேண்டும். ஆய்வின் […]
’Resign Anbil Mahesh’ ஹேஷ்டேக் எதிரொலி..? கல்வித் தொலைக்காட்சி சிஇஓ நியமனம் நிறுத்திவைப்பு..! - அமைச்சர்

You May Like