fbpx

தூங்கிக் கொண்டிருந்த பச்சி குழந்தையை கடத்த முயன்ற நபரை வெளுத்து வாங்கிய ஊர் மக்கள்…….!

நாட்டில் பல்வேறு தவறுகள் மற்றும் குற்றங்கள் நாள்தோறும் நடைபெற்று வருகின்றன. ஆனால் இதில் பல குற்றங்கள் நடைபெறுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது மது தான் இந்த மது இல்லாவிட்டால் பல தவறுகள், குற்ற செயல்கள் குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அந்த வகையில், சென்னை திருவல்லிக்கேணியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 5 வயது குழந்தையை கடத்திச் செல்ல முயற்சி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் நடந்திருக்கிறது குழந்தையை கடத்த முயற்சி செய்த நபரின் பெயர் புருஷோத்தமன் என்று அடையாளம் காணப்பட்டு இருக்கிறது என்றும், அப்போது அவர் குடிபோதையில் இருந்தார் எனவும் காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ராயப்பேட்டை காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கும் போது சிறுமியின் வீட்டிற்கு அருகில் வசித்து வரும் புருஷோத்தமன் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டின் முன் கதவு திறந்து கிடப்பதை பார்த்து உள்ளே நுழைந்து இருக்கிறார் என்று கூறினார்.

மேலும் வீட்டிற்குள் தன்னுடைய பெற்றோருக்கு அருகில் உறங்கிக் கொண்டிருந்தது அந்த குழந்தை. தூக்கத்தில் இருந்த அந்த குழந்தையை அப்படியே தூக்கிக் கொண்டு செல்ல முயற்சி செய்தபோது அந்த குழந்தையின் பெற்றோர் விழித்துக் கொண்டனர். தூங்கும் நிலையில் இருக்கும் குழந்தையை புருஷோத்தமன் கையில் தூக்கி வைத்திருப்பதை அவர்கள் பார்த்து விட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த புருஷோத்தமன் அங்கிருந்து வேகமாக ஓடத் தொடங்கி விட்டார். அவரை துரத்திச் சென்றபடியே அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்திருக்கிறார்கள் அந்த பெற்றோர்கள். வேகமாக ஓடி வந்ததில் கால் தடுமாறி தெருவில் விழுந்த புருஷோத்தமனை அந்த பகுதியில் இருந்த மக்கள் பிடித்துக் கொண்டனர்.

ஊர் மக்களிடம் வசமாக சிக்கிக்கொண்ட புருஷோத்தமன் அவர்களிடம் தர்ம அடி வாங்கினார். இதன் காரணமாக, அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது அவர் குடிபோதையில் இருப்பதை அறிந்து கொண்ட பொதுமக்கள் ராயப்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் கொடுத்து இருக்கிறார்கள். உடனடியாக காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை கைது செய்தனர்.

மேலும் காவல்துறையினர் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர் அந்த விசாரணையில் புருஷோத்தமன் ஒரு தினக்கூலி தொழிலாளி என்பதும், பெரும்பாலான தினங்களில் அவர் குடிபோதையில் தெருவில் விழுந்து கிடப்பவர் எனவும் தெரியவந்திருக்கிறது.

படுகாயம் அடைந்திருந்த அவரை சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அவர் குழந்தையை கடத்த முயற்சி செய்தாரா? என்பது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Next Post

மகளின் கழுத்தை நெறித்து கொலை செய்த 2வது மனைவி……! அதிர்ச்சியில் கணவர்…..!

Sun Feb 26 , 2023
எத்தனையோ தம்பதியினர் குழந்தைகள் இல்லை என்று ஏக்கத்தில் இருந்து வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் குழந்தை செல்வங்களை இறைவன் வழங்குவதில்லை. குழந்தையின் அருமை தெரியாமல் அந்த குழந்தைகளை படாத பாடுபடுத்தும் ஒரு சில பெற்றோர்களுக்கு மட்டும் உடனே குழந்தை பிராப்த்தம் கிடைத்து விடுகிறது.அப்படி வர பிரசாதமாக கிடைத்த குழந்தைகளை அந்த குழந்தைகளின் பெற்றோரே கொலை செய்யத் துணிந்தால், மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் கடந்த புதன்கிழமை அன்று 30 வயது மதிக்கத்தக்க மனவளர்ச்சி […]
வரதட்சணை கேட்காமல் லட்சக்கணக்கில் புரோக்கர் கமிஷன்..!! திருமணம் முடிந்தும் சிங்கிளாக சுத்தும் இளைஞர்..!!

You May Like