fbpx

எடப்பாடி பழனிச்சாமி கட்சியில் தன்னிச்சையாக செயல்பட; தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு…!

அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்கக்கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக கட்சியில் செயல்படவும், உத்தரவுகளை பிறப்பிப்பதற்கும், தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், ஒற்றை தலைமையை உருவாக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யும்படியும் பிரதான கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கில் அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இடைக்கால மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்கும், பிரதான மனு மீதான விசாரணையை செப் 1-ஆம் தேதிக்கும் ஒத்திவைத்துள்ளது.

Rupa

Next Post

வெளியானது தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு பாடல்...!

Thu Jul 21 , 2022
இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெறுகிறது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, வருகிற 28-ஆம் தேதி முதல் ஆகஸ்டு 10-ஆம் தேதி வரை சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் நடக்கவுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்தப் போட்டியில் 180-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து, 2.500 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். நேரு உள் விளையாட்டரங்கில் நடக்கவிருக்கும் இந்த போட்டியின் தொடக்க விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். […]

You May Like