fbpx

ஏப்ரல் 5ம் தேதி முதல் அதிமுகவின் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கப்படும்…..! பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியின் முதல் அறிக்கை……!

அதிமுகவின் பொது செயலாளர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து, இன்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவர் தன்னுடைய முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாக அதிமுகவில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் 5 வருடங்களுக்கு ஒரு முறை பயன்படுத்தினர். உரிமை சீட்டுகளை புதுப்பிக்க வேண்டும் என்ற கழக சட்டதிட்ட விதிமுறைகளின் படி கழகத்தின் உறுப்பினர்களாக இருப்பவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் விதத்திலும் புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்ப படிவங்கள் வருகின்ற 5/4/ 2023 புதன்கிழமை முதல் தலைமை கழகத்தில் விநியோகம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

கழக உடன்பிறப்புகள் புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்ப படிவங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து ஒரு உறுப்பினருக்கு ரூபாய் 10 வீதம் தலைமை கழகத்தில் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய முதல் அறிக்கையின் மூலமாக கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Post

திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமா…..? பிக்பாஸ் பாவனி அதிரடி பதில்…..!

Tue Mar 28 , 2023
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் இரட்டைவால் குருவி, பாசமலர், சின்னத்தம்பி, ராசாத்தி என்று பல்வேறு தொடர்களில் நடித்து வந்தவர் பாவனி. அதன் பிறகு கடந்த 2021 ஆம் வருடம் பிக் பாஸ் சீசன் 5ல் பங்கேற்றுக்கொண்ட பிறகு அவர் மக்களின் ஆதரவை வெகுவாக பெற்றார். அந்த நிகழ்ச்சி மூலமாக அவருக்கு மிகப்பெரிய ஆதரவு மக்களிடையே கிடைத்தது. ஆகவே அவர் தன்னுடைய காதலனை தேர்வு செய்தார். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பிறகு […]
’என்னுடைய கணவர் திரும்ப வர வேண்டும்’..! பாவனியின் பதிலால் குழம்பிப்போன அமீர்..!!

You May Like