ரஷியா-உக்ரைன் போர் காரணமாக உள்நாட்டு சந்தையில் கோதுமையின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. எனவே உள்நாட்டு சந்தையில் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கோதுமையின் தேவை அதிகரித்ததால், இந்தியாவின் கோதுமை மாவு ஏற்றுமதி 200 சதவீதம் அதிகரித்தது. இதனால் உள்நாட்டு சந்தையில் கோதுமை மாவு விலை கணிசமாக உயர ஆரம்பித்தது.
இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் நல்லிவடைந்த மக்களுக்கு உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.