fbpx

வீடியோ கால் மூலம் இளைஞரை மயக்கி கத்தி முனையில் நண்பர்கள் மூலமாக பணம் பறிப்பு…..! திண்டுக்கல்லில் பரபரப்பு……!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நகரை சேர்ந்தவர் அப்பாஸ் (22) என்ற இளைஞர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கடைவீதி பகுதியில் செருப்பு கடை ஒன்றை இவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக தவறான அழைப்பின் மூலமாக தொலைபேசியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும் அவர் தொடர்ச்சியாக அந்த இளைஞருக்கு வாட்ஸ் அப் மூலமாக குறுந்தகவலை அனுப்பி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க அப்பாஸ் தன்னுடைய நண்பர்களான சாலை தெருவை சேர்ந்த சுல்தான் அரபாத் கொல்லம் பட்டரையை சேர்ந்த ஜீவா உள்ளிட்ட மூவருடன் திண்டுக்கல்லில் ஜவுளி எடுத்து வரலாம் என்று இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார் அதாவது அவர்கள் மூவரும் திட்டமிட்டு அப்பாஸை அழைத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், வேடசந்தூரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காக்கா தோப்பு பேசிய நெடுஞ்சாலை புற வழி பகுதியில் இருசக்கர வாகனங்களை அப்பாஸின் நண்பர்கள் நிறுத்தி இருக்கிறார்கள்.

பின்பு திண்டுக்கல்லில் இருந்து மேலும் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களுடன் அப்பாஸை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது அவர்களை அனுப்பி வைத்து விட்டு இவர்கள் மூவரும் அவர்களை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அதன் பிறகு வத்தலகுண்டு அருகே வனப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது வாகனத்தை நிறுத்தி அப்பாஸை பாடலுக்கு நடனம் ஆட வைத்து கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கி இருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து, கத்தி முனையில் மிரட்டி அவரிடம் பணம் கேட்டு இருக்கிறார்கள் ஆகவே அப்பாஸின் தந்தையான ஹக்கீம் சேட் கடத்திச் சென்ற நபர்களிடம் 1,10,000 ரூபாய் பணத்தை கொடுத்து அந்த இளைஞரை மீட்டு வந்துள்ளார். ஆகவே தன்னுடைய மகனுக்கு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பால் அவர் பாதிக்கப்பட்டது ஊரில் இருப்பவர்கள் தெரிந்தால் மரியாதையாக இருக்காது என்று நினைத்து அவரை தஞ்சைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

இது குறித்து வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டது. அந்த புகாரை அடிப்படையாக வைத்து, இளைஞரின் நண்பர்களான சாலை தெருவை சேர்ந்த சுல்தான் மற்றும் அரபாத் கொல்லம்பட்டரை பகுதியைச் சேர்ந்த ஜீவா உள்ளிட்ட மூவரையும் கைது செய்து காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

அத்துடன் இளைஞரிடம் வீடியோ காலில் பேசிய திண்டுக்கல்லை சார்ந்த மேரி என்ற பெண் உட்பட 5 பேரை வேடசந்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையிலான காவலர்கள் வலை வீசி தேடி வருகிறார்கள்.

Next Post

"போலீஸின் அட்ராஸிட்டி......"!பிறந்து 4 நாட்களேயான பச்சிளம் குழந்தை! காவல்துறை அதிகாரி மிதித்ததால் பரிதாபமாக பலி!

Thu Mar 23 , 2023
காவல்துறையினரால் பிறந்து 4 நாட்களேயான பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிரிடித் மாவட்டத்தில்தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது . ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிரிடித் மாவட்டத்தில் ஒரு குற்றவாளியை தேடி காவல்துறையினர் ஒரு வீட்டை சோதனை செய்தபோது இந்த துக்க சம்பவம் நிகழ்ந்ததாக தெரிகிறது. இறந்த குழந்தையின் தாத்தா பூஷன் பாண்டே ஒரு குற்ற வழக்கில் கைது […]

You May Like