தமிழகத்தில் நாள்தோறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகின்றனர். அதோடு தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரமும் அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் நாள்தோறும் எங்காவது ஒரு மூலையில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வெடிகுண்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்த வண்ணம் தான் இருக்கின்றனர்.
இதனை தமிழக அரசு கட்டுப்படுத்துவதாக தெரியவில்லை. இது போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்று தமிழக அரசு கூறினாலும், இது போன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு தடுத்து நிறுத்த முடியவில்லை.
அந்த வகையில், திருநெல்வேலி டவுன் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் தன்னுடைய உறவினர் கலைச்செல்வனுடன் குற்றால சாலை சி எஸ் ஐ கிறிஸ்து ஆலயம் எதிரில் இருக்கின்ற பரோட்டா கடைக்கு நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளார். அந்த சமயத்தில் அவர்கள் இருவரையும் காரில் பின் தொடர்ந்து அந்த அடையாளம் தெரியாத மருமகன் அவர்கள் சிலர் காரில் இருந்து ஒரு மர்ம பொருளை தூக்கி வீசி உள்ளனர். அந்த மர்ம பொருள் தரையில் விழுந்தவுடன் அதி பயங்கரமான சத்தத்துடன் வெடித்து சிதறி இருக்கிறது.
அதன் பின்னர் காரில் இருந்து இறங்கிய அந்த மருமகம்பல் ஐயப்பன் மற்றும் கலைச்செல்வன் உள்ளிட்டோரை அறிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, விரட்ட தொடங்கியது. அவர்களிடம் இருந்து தப்பிச்சென்ற இருவரும் திருநெல்வேலி டவுன் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர்.
இதனை தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர். திருநெல்வேலி மாநகர காவல் துறை துணை ஆணையாளர் சீனிவாசன் தலைமையில் அந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
இதன் அடுத்த கட்டமாக, நடமாடும் தடய அறிவியல் ஆய்வகம் வரவழைக்கப்பட்டு, அதிகாரிகள் அந்த மர்ம பொருள் வெடித்த பகுதியில் சோதனை நடத்தினர். காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த ஐயப்பன் மற்றும் கலைச்செல்வன் உழைத்த இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அவர்களிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் மர்ம பொருள் வெடித்த இடத்திலிருந்து கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்திருக்கிறார்கள். பொதுமக்கள் அதிகமாக நடமாட்டம் இருக்கின்ற இந்த பகுதியில் மர்ம பொருள் வெடித்ததால் பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது.
அத்துடன் இருதரப்பினருக்கும் இடையே இருக்கின்ற முன்பகையின் காரணமாக, இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.