fbpx

மும்பையில், புதிதாக அறிமுகமான ஏ.சி. மின்சார ரயில் சேவைகள் ரத்து; பயணிகள் போராட்டத்தின் எதிரொலி..!

மத்திய ரயில்வேயில் கடந்த 19-ஆம் தேதி புதிய பத்து ஏ.சி. மின்சார ரயில் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டன. ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த சாதாரண மின்சார ரெயில்களுக்கு மாற்றாக இந்த ஏ.சி. மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. எனவே இந்த புதிய ஏ.சி. ரயிலுக்கு எதிராக பயணிகள் போராட்டம் செய்தனர். மேலும் அவர்கள் பழயபடி சாதாரண மின்சார ரயில்களை இயக்குமாறு வலியுறுத்தினர்.

இதேபோல அரசியல் தலைவர்களும் மீண்டும் சாதாரண ரெயில்களை இயக்குமாறு கேட்டுக் கொண்டனர். இந்தநிலையில் கடந்த 19-ஆம் தேதி முதல் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பத்து ஏ.சி. மின்சார ரயில் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள தகவலில், புதிய ஏ.சி. ரயில்கள் இயக்கப்பட்ட அதே நேரத்தில், ஏற்கனவே உள்ளது போல சாதாரண மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் மத்திய ரயில்வே, சாதாரண மின்சார ரெயில்களுக்கு பதிலாக ஏ.சி. மின்சார ரயில் இயக்குவதை கைவிட்டு, புதிய நேரத்தில் ஏ.சி. மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

Baskar

Next Post

கூட்டு பாலியல் வன்கொடுமை; சிறுமியை சிதைத்து சின்னாபின்னமாகி தூக்கி எறிந்த இளைஞர்கள்..!

Thu Aug 25 , 2022
உத்திர பிரதேச மாநிலத்தில் கடந்த பத்தாம் தேதி அன்று கவுந்தியாரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சிறுமியை, பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு அந்த சிறுமியை கடத்தி உள்ளார்.  அந்த சிறுமியை ஒரு அறையில் அடைத்து வைத்து மூன்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்த சிறுமியை உடல் முழுவதும் கடித்து வைத்துள்ளனர். அந்தரங்க பகுதியை சிதைத்திருக்கின்றனர். மேலும் […]

You May Like