fbpx

பத்திரிக்கை வைக்காதது ஒரு குத்தமா? திருவிழாவில் வைத்து சரமாரியாக கத்திக்குத்து…!

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி விடிவெள்ளி பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (34). இவர் பேன்சி ஸ்டோர் கடை வைத்து வியாபாரம் செய்பவர். இவருக்கு திவ்யதர்ஷினி (13) என்ற மகளும், ஆகாஷ் (11) என்ற மகனும் உள்ளனர். இவர் ஊர் ஊராக இரு சக்கர வாகனத்தில் சென்று பேன்சி பொருட்கள் மற்றும் நாய் பொம்மைகள் வியாபாரம் செய்து வந்தார்.

முனியப்பன் மகள் திவ்யதர்ஷினிக்கு கடந்த 4 அம் தேதி தனியார திருமண மண்டபத்தில் மஞ்சள் நீராட்டு மற்றும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அதே நகரை சேர்ந்த ஈஸ்வரன் (42). இவா் தொழிலாளி. முனியப்பனும், ஈஸ்வரனும் உறவினர்கள். முனியப்பன் மகளுக்கு நடக்க இருக்கும் மஞ்சள் நீராட்டு விழாவில் ஈஸ்வரனை
அழைக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் முனியப்பனுக்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு விடிவெள்ளி நகரில் கங்கை முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த முனியப்பனை அங்கு வந்த ஈஸ்வரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார். முனியப்பன் பலத்த காயமடைந்து கீழே விழுந்தார்.

பின்னா், அக்கம் பக்கத்தினர் முனியப்பனை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். முனியப்பனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த முனியப்பன் உடலை மருத்துவர்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதி மக்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர். பின்னர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Baskar

Next Post

ரகசிய திருமணம் செய்த, காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு...!

Mon Jul 11 , 2022
தர்மபுரி மாவட்டம், ஜிட்டாண்டஅள்ளி அருகேயுள்ள கொல்லப்பட்டியில் வசித்து வரும் முனியப்பனினி மகள் சினேகா. இவர் பாலக்கோடு பகுதியில் உள்ள கவர்மெண்ட் பாலிடெக்னிக் காலேஜில் இரண்டாம் வருடம் படித்து வந்தார். ஜிட்டாண்டஅள்ளி அருகில் உள்ள குளிக்காடு பகுதியில் வசித்து வரும் முருகன் மகன் தமிழரசு தர்மபுரியில் உள்ள ஐடிஐ யில் இரண்டாம் வருடம் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் பஸ்ஸில் பயணம் செய்யும்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அந்த பழக்கம் காதலாக […]
விரட்டிப் பிடித்த மினிபஸ் ஓட்டுநர்கள்..!! உயிரை மாய்த்துக் கொண்ட பெண் பயணி..!! சமையலறையில் கிடந்த சடலம்..!!

You May Like