fbpx

தராதரம் தெரியாத தகாத உறவு.. கழுத்தை நெரித்து கதையை முடித்த கொடூரம்…!

மும்பை, மலாடு ஹோட்டலில் பெண்ணை கழுத்தை நெரித்து கொன்ற வீட்டு வேலைக்காரரை போலீசார் கைது செய்தனர். பெண்ணின் உடல் மீட்பு

மும்பை மலாடு பகுதியில் உள்ள அக்சா லாட்ஜில் நேற்று முன்தினம் ஒரு ஆணும் பெண்ணும் வந்து தங்கி இருந்தனர்.அந்த பெண் நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அந்த பெண்ணுடன் வந்த ஆண் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து பெண்ணின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். உடல் கூறு ஆய்வின் முடிவில் அந்த பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அப்பெண் கோரேகாவ் பகத்சிங் நகரில் வசித்து வரும் அமல்மேரி சார்லி(47) என்பதும், விதவையான இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவருக்கு காந்திவிலி தானுக்கர்வாடியை சேர்ந்த வீட்டு வேலை செய்து வருபவரான அமித் புவட் (36) என்ற வாலிபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

இதனால் அடிக்கடி அவர்கள் இருவரும் லாட்ஜில் அறை எடுத்து தங்குவது வழக்கமாக இருந்துள்ளது. அப்படி அக்சா லாட்ஜில் அறை எடுத்து தங்கிய போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் அமல்மேரி சார்லியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பிசென்றது தெரியவந்தது. இதையடுத்து காந்திவிலியில் பதுங்கி இருந்த வாலிபர் அமித் புவடை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Baskar

Next Post

’எடப்பாடியிடம் ஓபிஎஸ் வருத்தம் தெரிவிக்க வேண்டும்’..! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி..!

Fri Jul 15 , 2022
அதிமுக-வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்ளவோம்; தனது செயலுக்கு ஓபிஎஸ், இ.பி.எஸ்ஸை சந்தித்து வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க பாடுபடுவேன். அதிமுக தொண்டரின் புனித ஸ்தலமாக தலைமை அலுவலகம் விளங்குகிறது. அப்படிபட்ட இடத்தில் வன்முறை சம்பவம் நிகழ்ந்தது வருத்தமளிக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக […]

You May Like