தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று பெயர் எடுத்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நயன்தாரா. தென்னிந்திய அளவில் அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் இவர் உள்ளார். இத்தகைய நிலையில், பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் என்பவர் நடிகை நயன்தாராவின் மார்க்கெட் சரிவதற்கான காரணம் தொடர்பாக ஒரு பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். அதாவது திருமணத்திற்கு பிறகு நயன்தாராவின் படம் தொடர்பான அறிவிப்புகள் பெரிதாக வெளியாவது இல்லை என்று கூறியுள்ளார்.
நடிகை நயன்தாரா அவருடைய ரவுடி பிச்சர்ஸ் மூலமாக தயாரித்த கனெக்ட் என்ற திரைப்படம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை என்றும் கூறியுள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் தனக்குள்ள வரவேற்பின் நம்பிக்கையின் அடிப்படையில் சிறிய அளவிலான பட்ஜெட் திரைப்படங்களில் கமிட் ஆகி அதனை தானே எடுத்து அதிக விலைக்கு ஓடிடியில் விற்பனை செய்ய முயற்சிக்கிறார் நயன்தாரா.
ஆகவே தமிழ் சினிமாவை நயன்தாரா தவறாக பயன்படுத்த முயற்சிப்பது தான் அவருடைய மார்க்கெட் சரிவதற்கு காரணம் என்று கூறியுள்ளார் அந்த பத்திரிக்கையாளர். மேலும் நயன்தாரா பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
திருமணத்திற்கு பிறகு அவருக்கு பெரிய அளவில் திரைப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை, அவருடைய திரைப்படங்களும் வெளியாகவில்லை என்று கூறியுள்ளார் அந்த பத்திரிக்கையாளர். ஆனால் நயன்தாரா தற்போது ஜவான், இறைவன், நயன்தாரா 75 உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.