fbpx

பிரம்மாண்ட செட்டிற்குள் கே ஜி எஃப் விநாயகர்; தேன்கனிக்கோட்டையில் கோலாகல கொண்டாட்டம்..!

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை முன்னிட்டு, ராஜ மார்த்தாண்ட பக்த மண்டலி சார்பில் கே.ஜி.எப்., பட பாணியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.

கே.ஜி.எப். படத்திற்கு செட் உருவாக்கிய குழுவினரை வரவழைத்து செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செட்டில் கே.ஜி.எப்., திரைப்படத்தில் உள்ளது போல், காளி உருவம் நிற்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அங்கு உருவாக்கப்பட்டுள்ள குகைக்கு உள்ளே சென்றால் கே.ஜி.எப்., விநாயகர் பிரமாண்டமாக காட்சியளிக்கிறார்.

ராஜ மார்த்தாண்ட பக்த மண்டலி சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த செட் பக்தர்களை மிகவும் கவர்ந்துள்ளது. மேலும் இதேபோல் தேன்கனிக்கோட்டையில், பல இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கோலாகலமாக பூஜைகள் நடைபெற்றன.

Baskar

Next Post

மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து அண்ணாமலை மௌனம் காப்பது ஏன்?.. கே எஸ் அழகிரி கேள்வி..!

Thu Sep 1 , 2022
சின்ன சேலம் மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவிக்காதது ஏன் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் இது தொடர்பாக திருவண்ணாமலையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்திப்பில் கூறியிருப்பதாவது, கனியாமூர் பள்ளி குழந்தையின் மரணத்திற்கு மட்டும் ஏன் அவர்கள் கருத்து கூறவில்லை. ஒரு கண்டனம் கூட […]

You May Like