fbpx

அண்ணனை கடத்திச் சென்று சொத்தை அபகரித்த தங்கையை தேடும் போலீஸ்…..! மகன் உட்பட 5️ பேர் அதிரடி கைது…!

திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்துள்ள தெக்கலூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (52 )இவர் திரைப்பட உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவருடைய தங்கை அம்பிகா (51) கணவர் வேலுச்சாமி இந்த தம்பதியின் மகன் கோகுல கண்ணன்.

இவர்கள் பல்லடம் சேடப்பாளையம் பகுதியில் வசித்து வந்தனர். சிவகுமார், அம்பிகாவின் தந்தையும், தாயும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்து விட்டனர் இதனைத் தொடர்ந்து கோவை மற்றும் பல்லடத்தில் இருக்கின்ற பூர்வீக சொத்துக்கள் சிவக்குமாரின் பெயருக்கு மாற்றப்பட்டனர்.

விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்த சிவகுமாரிடம் பூர்வீக சொத்தை தங்களுக்கு எழுதிக் கொடுக்குமாறு அம்பிகா சண்டையிட்டு வந்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த அவரை கடந்த 25ஆம் தேதி அம்பிகா மற்றும் அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் கடத்திச் சென்றனர். பல்லடத்தில் அம்பிகாவுக்கு சொந்தமாக இருக்கக்கூடிய வீட்டில் அடைத்து வைத்து, கூலிப்படையினரை வைத்து அவர் மீது தாக்குதல் நடத்தி சொத்து பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டனர்.

நகையும் பணத்தை அபகரித்துவிட்டு பெங்களூருவில் இருக்கின்ற மனநல மருத்துவமனையில் சிவகுமாரை சேர்த்திருக்கிறார்கள். மனநல காப்பகத்தில் இருந்தவர்களிடம் நடந்தவற்றை தெரிவித்து அங்கு இருந்தவர்கள் மூலமாக தன்னுடைய உறவினர்களுக்கு சிவகுமார் தகவல் கொடுத்திருக்கிறார். உறவினர்கள் சிவகுமாரை மீட்டு பல்லடத்திற்கு அழைத்து வந்தனர்.

இது தொடர்பாக சிவகுமார் வழங்கிய புகாரினை அடிப்படையாகக் கொண்டு, அம்பிகா, வேலுச்சாமி, கோகுல கண்ணன் போன்ற 6 பேர் மீது பல்லடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இதில் வேலுச்சாமி( 61), கோகுல கண்ணன் (25), கூலிப்படையைச் சேர்ந்த அஷ்ரப் அலி(30), ரியாஸ் கான் (29 ),சாகுல் ஹமீது (35) உள்ளிட்ட 5 பேரை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். அதோடு, அம்பிகாவை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றார். இதில் கோகுல கண்ணன் பல்லடம் நகர பாஜக விவசாய அணி செயலாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

வாரிசு vs துணிவு..,! மலேசிய நாட்டில் எந்த திரைப்படம் அதிக வசூல் சாதனை படைத்தது…?

Wed Feb 1 , 2023
தமிழ் திரையுலகின் தற்போதைய காலகட்ட சாம்பவான்களாக விளங்கி பெரும் அஜித், விஜய் போன்ற மாபெரும் நடிகர்களுக்கு இந்தியாவை கடந்து சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில், தமிழ் திரை துறையின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக பொங்கலின்போது வெளியான திரைப்படங்கள்தான் துணிவும், வாரிசும்.இந்த 2 திரைப்படங்களில் எந்த திரைப்படம் அதிகம் வசூல் செய்தது என்ற பேச்சு தான் இந்த திரைப்படங்கள் வெளியான முதல் நாளிலிருந்து பேசப்பட்டு […]

You May Like