சேலத்தில் உள்ள சிறைச்சாலையில் வார்டன் இருவருக்குமிடையே நடந்த வாக்குவாதம் மற்றும் அடிதடி தகறாரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இச்சிறைச்சாலையில் சுமார் நாற்பத்து ஐந்துக்கும் மேற்பட்ட கைதிகள் இருக்கின்ற நிலையில், இங்கு வார்டன்கள் மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
சிறையில் சில வார்டன்களிடையே ‘லெஸ்பியன்’ என்ற பழக்கம் இருந்து வந்ததால், அடிதடியும் நிகழ்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு கணவரை பிரிந்து வாழும் வார்டன் பெண் ஒருவரும் விவாகரத்தான வார்டன் பெண் ஒருவரும், ஒன்றாக வசித்த நிலையில் இருவருக்குமிடையே லெஸ்பியன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
விவாகரத்தான வார்டன், இன்னொரு புது வார்டனுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளதை, தெரிந்துகொண்ட கணவரை பிரிந்து வாழும் வார்டன் கடும் கோபத்திற்கு உள்ளானார். தன்னுடன் மட்டும் தான் பழக வேண்டும், பேச வேண்டும் என எச்சரிக்கை விடுத்த நிலையில், புதுப்பழக்கத்தை கைவிடமுடியாமல் அந்த வார்டன் தொடர்ந்து புறக்கணித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இருவருக்கும் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் கோபத்தில் ஒருவர் முடியை ஒருவர் பிடித்து சண்டையிட்டுள்ளனர்.இதனால் ஒருவருக்கு முகம், கைகளில் நகக்கீறல் ஏற்பட்டுள்ளது.
இது பற்றி மற்ற வார்டன்களிடம் விசாரித்த போது, ”அவர்கள் இருவரும் தனிமையில் இரவு நேரங்களில் சிறையிலேயே உறவு வைத்துக்கொள்வதாகவும். தங்களுக்கு நீதிமன்றமே அனுமதி வழங்கிவிட்டதாகவும் கூறுவார்கள்.” என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சிறை விஜிலென்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.