சின்னத்திரை நகைச்சுவை நடிகர் மதுரை முத்து பட்டிமன்ற நடுவராகவும், மேடைப் பேச்சாளராகவும் பிரபல விஜய் தொலைக்காட்சியில் தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிக்காட்டி வருகிறார்.அசத்தப்போவது யாரு, காமெடி ஜங்ஷன் உள்ளிட்ட சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலமாக இவர் தமிழக மக்களிடையே பிரபலமானார்.
இவர் லேகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு இரு குழந்தைகள் இருக்கின்றன. ஆனால் லேகா கடந்த 2016 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் ஒரு கார் விபத்தில் திடீரென்று மரணமடைந்தார். அதன் பிறகு தன்னுடைய 32 வது வயதில் தன் மனைவியின் தோழியான பல் மருத்துவர் நீத்து என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் தன்னுடைய முதல் மனைவி தொடர்பாக ஒரு பேட்டியில் அவர் பேசினார், அப்போது என்னுடைய முதல் மனைவிக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருந்தது. கணவன் இல்லாமல் அவர் படும் துன்பத்தைக் கண்டு நான் வருத்தப்பட்டேன். நான் தங்களை திருமணம் செய்து கொள்ளலாமா என்று அவரிடம் கேட்டேன் என கூறியுள்ளார்.
ஆனால் இரண்டாவது திருமணம் என்பதால் வீட்டில் இருந்தவர்கள் எங்களுடைய திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. பல எதிர்ப்புகளுக்கு நடுவில் தான் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம் என்று தெரிவித்துள்ளார் மதுரைமுத்து.