fbpx

அடேங்கப்பா 10க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய காதல் இளவரசன்!

ஒரு காலத்தில் ஒரு ஆண் திருமணமான பிறகு அவருடைய மனைவி உயிரிழந்து விட்டால் மறுமணம் செய்து கொள்ளலாம். ஆனால் ஒரு பெண் திருமணமான பிறகு அவருடைய கணவர் உயிரிழந்து விட்டால் அவரும் உடன்கட்டை ஏற வேண்டும் என்ற ஒரு சம்பிரதாயம் பின்பற்றப்பட்டு வந்தது.

ஆனால் காலப்போக்கில் அந்த உடன்கட்டை ஏறும் சம்பிரதாயத்தை யாரும் பின்பற்றவில்லை.அதேபோல பெண் மறுமணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில், தற்போது பெண்கள் கணவரின் இறப்பிற்கு பிறகு மறுமணம் செய்து கொள்ளும் நிகழ்வு தற்போது ஒரு சாதாரண நிகழ்வாகிவிட்டது.

அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்துள்ள நல்லம்பட்டியைச் சேர்ந்த ஜான்சிராணி என்ற பெண் தன்னுடைய கணவர் உயிரிழந்துவிட்டதை தொடர்ந்து மறு திருமணத்திற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த விதத்தில் ஜான்சிராணி உடன் அறிமுகமானவர் பரமக்குடியைச் சேர்ந்த கார்த்திக்ராஜா இவர் ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது.

கார்த்திக் ராஜாவுக்கும், ஜான்சிராணிக்கும் சில தினங்கள் செல்போன் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கார்த்திக்ராஜா தனக்கு பணத்தை இருப்பதாக தெரிவித்து, ஆனால் தன்னிடம் தாயாரின் தாலி செயின் தான் இருக்கிறது. அதனை அடகு வைக்க இயலாது என்று தெரிவித்து ஜான்சி ராணியிடம் அந்த தாலியை கொடுத்துவிட்டு அவரிடம் இருந்த நகையை வாங்கிக் கொண்டு திடீரென்று காணாமல் போனார்.

இதில் அதிர்ச்சியான சம்பவம் என்னவென்றால், கார்த்திக் ராஜா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தானவர். அதோடு விவாகரத்தான தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஜீவனாம்சம் வழங்குவதற்காக ஜான்சிராணி போல மொத்தம் 19 பெண்களிடம் 80 சவரன் வரையில் நகைகளை மோசடி செய்திருக்கிறார்.

இந்த நிலையில் தான் கார்த்திக் ராஜா ஜான்சிராணியிடம் வழங்கியது போலி நகை என்பது தெரிய வந்திருக்கிறது. உடனடியாக கார்த்திக் ராஜாவின் மீது காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணைகள் தான் இந்த விபரங்கள் அனைத்தும் தெரிய வந்திருக்கிறது. அத்தோடு இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன.

Next Post

என்னடா அங்க சத்தம்? தட்டி கேட்ட சொந்த பெரியப்பாவை படுகொலை செய்த இளைஞர்!

Sun Dec 25 , 2022
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள உடையாண்டஅள்ளியை சேர்ந்தவர் பெருமாள்(63). இவர் இருசக்கர வாகனத்தின் மூலமாக பிளாஸ்டிக் குடங்கள் மற்றும் பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை ஊர் ஊராக எடுத்துச் சென்று விற்பனை செய்யும் தொழிலை செய்து கொண்டிருக்கிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 2 மகள்களும் 1 மகனும் இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் பாத்திரம் வியாபாரியான பெருமாளுக்கும், அவருடைய தம்பியின் மகன் சக்திவேல்(23) என்ற இளைஞருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு […]

You May Like