fbpx

கடலூர் அருகே காட்டுமன்னார்கோவில் பகுதியில் கஞ்சா விற்ற இளைஞர் அதிரடி கைது…..!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மநாதன் (25) இவர் இணையதளம் மூலமாக உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று வழக்கம் போல காட்டுமன்னார்கோவில் வசந்தம் நகர் பகுதியில் உணவு டெலிவரி செய்வதற்காக சென்று உள்ளார்.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் பத்மநாபனின் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அவர் வைத்திருந்த பெட்டியின் உணவு மற்றும் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது.

இந்த நிலையில், காவல்துறையினர் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கஞ்சாவை வெளி மாநிலங்களில் இருந்து ரயில் மூலமாக கடத்தி வந்து உணவு டெலிவரி மூலமாக செய்து வருவதற்காக இதனை தொடர்ந்து காவல்துறையினர் பத்மநாதனை கைது செய்தனர்.

Next Post

ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.6 ஆயிரம் வட்டி..!! ரூ.2 கோடி வரை மோசடி செய்த பெண்..!! தட்டித் தூக்கிய போலீஸ்..!!

Thu May 11 , 2023
ஓமலூர் அருகே டிரேடிங் நிறுவனம் நடத்தி ரூ.2 கோடிக்கு மேல் மோசடி செய்த பெண்ணை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே எம்.செட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டித்துரை என்பவரின் மனைவி மாலதி என்பவர் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.6,000 வட்டி தருவதாக கஞ்சநாயக்கன் பட்டியில் உள்ள கே.எம்.கே.எஸ்.குளோபல் டிரேடிங் என்ற […]

You May Like