fbpx

கருணாநிதிக்கு பாளையங்கோட்டை சிறையில் நினைவுச் சின்னம்… சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தகவல்..!

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு இன்று வந்தார். பிறகு சிறையில் ஆய்வு மேற்கொண்டார். சிறையில் கைதிகளின் அறைகள் மற்றும் உணவுக் கூடம், கைதிகள், விவசாய நிலங்கள்,பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழில் கூடம், போன்றவற்றை பார்வையிட்டார். தேவையான, அடிப்படை வசதிகள் குறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் விசாரணை செய்தார்.

அதன் பிறகு அமைச்சர் நிருபர்களிடம் கூறியது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் ஆய்வு மேற்கொண்டேன். இங்கு விசாரணை கைதி, தண்டணை கைதி என்று மொத்தம் 1,378 கைதிகள் இருக்கின்றனர். ஆனால் இங்கு 1,332 கைதிகளுக்கு மட்டுமே இடம் இருக்கிறது. எனவே இங்கு கூடுதலாகவே கைதிகள் இருக்கின்றனர். தமிழகத்தில் உள்ள சிறைகள் இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவுக்கு நவீன வசதியுடன் இருக்க வேண்டும். மேலும் திறந்தவெளி சிறைச்சாலைகள் அமைக்கபட வேண்டும். கைதிகளுக்கு சிறந்த தொழில் பயிற்சி அளிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே நவீன வசதிகளுடன் பல இடங்களில் சிறைச்சாலைகள் புதிய கட்டிங்களாக கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மேலும் இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள் குறைவாக இருக்கின்றனர். அந்த பணியிடங்களை நிரப்பும் வகையில் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வரியம் மூலம் விரைவில் தேர்வு நடத்தப்படவுள்ளது. பாளையங்கோட்டை மத்திய சிறையில் முன்னாள் முதமைச்சர் கருணாநிதி இருந்த பகுதியை பார்வையிட்டோம். அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் இருந்த பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் முதலமைச்சர் அனுமதி பெற்று நினைவு சின்னம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீண்டகாலம் சிறை தண்டனை பெற்ற கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்க அனைத்து கோப்புகளும் தயார் நிலையில் இருக்கிறது. கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அதன்பிறகு அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Baskar

Next Post

2028 ஒலிம்பிக்கில் மீண்டும் இணைகிறது கிரிக்கெட்..? வெளியான முக்கிய தகவல்..!

Thu Aug 4 , 2022
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028ல் நடைபெற இருக்கும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கான முயற்சியில் ஐசிசி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி 2028ல் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் புதிதாக சேர்க்க உள்ள 8 விளையாட்டுகளின் உத்தேச பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் கிரிக்கெட், கராத்தே, கிக் பாக்சிங் உள்ளிட்ட விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் கமிட்டி இணைந்து இந்த பட்டியலில் […]
2028 ஒலிம்பிக்கில் மீண்டும் இணைகிறது கிரிக்கெட்..? வெளியான முக்கிய தகவல்..!

You May Like