திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள நெய்வேலி தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன் (51) காய்கறி வியாபாரியான இவரது வங்கி கணக்கில் ஒரு வருடத்திற்கு முன்னர் திடீரென்று 2 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருந்தது. ஒரு சில நாட்கள் காத்திருந்த முருகேசன் யாரும் அந்த பணத்திற்கு உரிமை கோராததால் அதனை செலவு செய்து விட்டார்.
இந்த சூழ்நிலையில்தான் முருகேசனின் வங்கி கணக்குக்கு தவறாக பணத்தை அனுப்பியவர் பணத்தை மீட்டு தருமாறு முசிறியில் உள்ள கனரா வங்கி கிளையில் மனு ஒன்றை வழங்கினார். அதனை அடிப்படையாக வைத்துக்கொண்டு வங்கி அதிகாரிகள் முருகேசன் இன் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டு, மே மாதம் 22ஆம் தேதி வங்கிக்கு வந்து பணத்தை செலுத்துமாறு தெரிவித்திருக்கிறார்கள்.
ஆனால் பணத்தை அந்த வியாபாரியால் திரும்ப செலுத்த இயலாததால் மன உளைச்சலில் இருந்த முருகேசன், கடந்த 19ஆம் தேதி இரவு தோட்டத்துக்கு சென்று பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக தகவல் அறிந்த வார்த்தை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று முருகேசனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.