fbpx

திருச்சி அருகே 2 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால்…..! வியாபாரி தற்கொலை…..!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள நெய்வேலி தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன் (51) காய்கறி வியாபாரியான இவரது வங்கி கணக்கில் ஒரு வருடத்திற்கு முன்னர் திடீரென்று 2 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருந்தது. ஒரு சில நாட்கள் காத்திருந்த முருகேசன் யாரும் அந்த பணத்திற்கு உரிமை கோராததால் அதனை செலவு செய்து விட்டார்.

இந்த சூழ்நிலையில்தான் முருகேசனின் வங்கி கணக்குக்கு தவறாக பணத்தை அனுப்பியவர் பணத்தை மீட்டு தருமாறு முசிறியில் உள்ள கனரா வங்கி கிளையில் மனு ஒன்றை வழங்கினார். அதனை அடிப்படையாக வைத்துக்கொண்டு வங்கி அதிகாரிகள் முருகேசன் இன் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டு, மே மாதம் 22ஆம் தேதி வங்கிக்கு வந்து பணத்தை செலுத்துமாறு தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால் பணத்தை அந்த வியாபாரியால் திரும்ப செலுத்த இயலாததால் மன உளைச்சலில் இருந்த முருகேசன், கடந்த 19ஆம் தேதி இரவு தோட்டத்துக்கு சென்று பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக தகவல் அறிந்த வார்த்தை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று முருகேசனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Post

இன்று ஸ்ரீநகரில் ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம்!

Mon May 22 , 2023
ஜி20 நாடுகளுக்கு இந்திய தலைமை பொறுப்பேற்று இருக்கிறது. இதனையடுத்து, இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெற இருக்கிறது. நாடு முழுக்க 200 நகரங்களில் சர்வதேச அளவில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இன்று ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற உள்ளது. அதற்காக ஸ்ரீநகர் முழுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.  இந்த மாநாடு […]

You May Like