திருச்சி, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மம்சாபுரத்தில் 49 வயது பெண் வசித்து வருகிறார். அந்தப் பெண்ணுக்கு போதைக்கு அடிமையான மகன் ஒருவர் உள்ளார். அவர் பெரம்பலூரில் உள்ள போதை மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். பிறகு அங்கிருந்து தப்பி வந்த அவர், சில வாரங்களுக்கு முன்பு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தினார். அங்கு வைத்து சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதுத்தெருவை சேர்ந்த ரஞ்சித்குமார்(27) என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சகஜமாக பேசிக்கொண்டனர். அப்போது ரஞ்சித் குமார், போதையில் இருந்த அந்த இளைஞரிடம் குடும்ப விவகாரங்கள், அந்த வாலிபரின் தாயின் போன் நம்பர் போன்றவற்றை கேட்டு தெரிந்து கொண்டார்.
அதன்பிறகு ரஞ்சித்குமார், அந்த இளைஞரின் தாய்க்கு போன் செய்து, உங்கள் மகன் என்னுடைய கஸ்டடியில் தான் இருக்கிறான். எனவே உங்கள் மகனை உயிரோடு விடவேண்டும் என்றால் நீங்கள் வீடியோ காலில் நிர்வாணமாக வர வேண்டும் என்று பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரின் தாய், வேறுவழியின்றி வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது ரஞ்சித்குமார் செல்போனில் ஸ்கிரீன்ஷார்ட் எடுத்து வைத்துகொண்டார். தொடர்ந்து, சில நாட்களுக்கு பிறகு மீண்டும் செல்போனில் பேசிய ரஞ்சித்குமார், உடனடியாக திருச்சிக்கு வரும்படி அப்பெண்ணிடம் கூறியுள்ளார்.
இதைதொடர்ந்து அந்த இளைஞரின் தாய் திருச்சி வந்துள்ளார்.
அப்போது மத்திய பேருந்து நிலையம் அருகே ரஞ்சித்குமார், அவருக்கு கூல்டிரிங்ஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். மயங்கிய நிலையில் இருந்த அந்த பெண்ணை ரஞ்சித்குமார் மத்திய பேருந்து நிலையத்தில் இருக்கும் ஒரு விடுதியில் ரூம் எடுத்து தங்க வைத்து பலாத்காரம் செய்துள்ளார். அதை செல்போனில் வீடியோ எடுத்து வைத்து கொண்டார். பிறகு தொடர்ச்சியாக அந்த பெணுக்கு செல்போனில் ஆபாசமான படங்களை அனுப்பியதோடு, மட்டுமல்லாமல் அவரது உறவினர்களின் செல்போனுக்கும், எடுத்து வைத்திருந்த ஆபாச வீடியோக்களை அனுப்பி வைத்து, பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் திருச்சி கன்டோன்மென்ட் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து காவல்துறையினர், நேற்று ரஞ்சித்குமாரை கைது செய்தனர். ரஞ்சித் குமாரிடம் நடத்திய விசாரணையில் திருப்பூரில் உள்ள கம்பெனியில் வேலை பார்க்கும் 50வயது மதிக்கத்தக்க பெண்களிடம் பழகி பாலியல் ரீதியான படங்கள் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார் என்பது தெரியவந்தது. முக்கியமாக, 12க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் ரஞ்சித்குமாரின் செல்போனில் பதிவாகி இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் ரஞ்சித்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.