கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதோடு, தென்காசி, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர் போன்ற மாவட்டங்களிலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையில் அடுத்த 2️ நாட்களுக்கு நகரத்தின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதேபோல இன்று மற்றும் நாளை உள்ளிட்ட தினங்களில் உள் தமிழக மாவட்டங்களில் அதிகபட்சமாக 38 டிகிரி முதல் 40 டிகிரி வரையில் வெயிலின் அளவு இருக்கக்கூடும் என்று கூறப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் வரும் 25ஆம் தேதி வரையில் பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.