மனிதராக இருக்கும் எல்லோருக்கும் பிரச்சனை வருவது இயல்பு அந்த பிரச்சனையை எப்படி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று அனைவரும் யோசித்து தான் செயல்பட வேண்டும். அவ்வாறு யோசித்து செயல்பட்டால் தடுக்க முடியாவிட்டாலும் வரப்போகும் இழப்புகளை குறைப்பதற்கான வாய்ப்பு உண்டு.
ஆனால் அதைத் தவிர்த்து ஏதாவது ஒரு பிரச்சனை வந்துவிட்டால் முன் பின் யோசிக்காமல் கோபப்பட்டு ஏதாவது ஒரு செயலை செய்து விட்டால், அதன் பின் விளைவு என்னவாக இருக்கும் என்பதை யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாது.
திருநெல்வேலி மாவட்டம் மலையடிகுறிச்சியை சேர்ந்தவர் வேல்துரை(33). இவர் சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் இருக்கின்ற தனியார் நிறுவனம் ஒன்றில் பெயிண்டர் ஆக வேலை செய்து வருகின்றார். நேற்று முன்தினம் இரவு இவர் பணிபுரியும் இடத்திற்கு வந்த ஒரு நபர் திடீரென்று வேல்துரையை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்று விட்டார். இதனால் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக கிண்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். காவல் துறையினரின் விசாரணையில் வேல்துறையை கொலை செய்தது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த வீரபுத்திரன்(37)தான் என தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் தான் தலைமறைவாக இருந்த வீரபுத்திரனை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். வேல்துரையின் மனைவியுடன் வீரபுத்திரன் தகாத உறவில் இருந்து வந்ததாகவும், ஆகவே இந்த விவகாரத்தால் வேல்துரை கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.