fbpx

தாம்பரம் அருகே…..! கிறிஸ்துவ தேவாலய சொத்துக்களை விற்று 11 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் அதிரடி கைது…..!

செங்கல்பட்டு மாவட்டம் திம்மா வரத்தில் ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களின் தலைமை இடமாக பேராயம் செயல்பட்டு வருகிறது.

இந்த பேராயத்திற்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சொத்துக்கள் இருக்கின்றன. இந்த சொத்துக்களை கடந்த 2009ம் வருடம் முதல் 2014ஆம் ஆண்டு வரையில் புதுக்கோட்டை மாவட்டம் மைக்கல் பட்டியை சேர்ந்த பாதிரியார் சிரில் ராஜ் என்பவர் நிர்வகிக்கவும் பராமரிப்பதற்கு நியமனம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தான் இவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்தி பேராயத்துக்கு சொந்தமான படூர் தையூர் இருமலையூர் புனித தோமையார் மலை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கின்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை சட்டவிரோதமாக பேராயத்தின் அனுமதி பெறாமல் விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஜார்ஜ் ஸ்டீபன் தாம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் சிரில் ராஜ்குமார் 66 பேருக்கு சாப்பிட்ட விரோதமாக ரூபாய் 11.68 கோடி நிலங்களை விற்பனை செய்துள்ளார். என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, அவரை கைது செய்த குற்ற பிரிவு காவல் துறையினர். தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.

Next Post

திருமணமாகாமல் கர்ப்பம்..!! கருவைக் கலைத்த காதலி..!! துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற காதலன்..!! பகீர் சம்பவம்..!!

Mon May 15 , 2023
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் தாம்சன் (22). இவரது காதலி கேப்ரியல்லா (26). இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், கேப்ரியல்லா கர்ப்பமடைந்துள்ளார். ஆனால், குழந்தைப் பெற்றுக் கொள்ள கேப்ரியல்லாவுக்கு விருப்பமில்லை. ஆனால், தனது குழந்தை தனக்கு வேண்டும் என ஹரால்டு விரும்பி உள்ளார். டெக்சாஸ் மாகாணத்தில் 6 வார காலத்திற்கு பின்னர் கருவை கலைக்க சட்டத்தில் அனுமதி இல்லை. அதனால், அந்த 6 வாரங்களும் தாம்சன், […]

You May Like