சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை அடுத்துள்ள செங்கல் அணை பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜகணபதி (42). இவருடைய மனைவி மீனாவை பிரிந்து இவர் பெற்றவுடன் சிங்களனை பகுதியில் இருக்கின்ற தன்னுடைய வீட்டில் வசித்து வந்தார். அவருடைய வீட்டின் மேல் தரத்தில் ராஜ கணபதியின் அண்ணன் செல்வம் அவருடைய மனைவியுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் தான் பெற்றோரின் பெயரில் இருக்கின்ற வீட்டை 2 பாகங்களாக பிரித்து அண்ணனுக்கும், தனக்கும் அவரவர்க்குரிய பங்குகளை வழங்க வேண்டும் என்று ராஜகணபதி தெரிவித்து வந்துள்ளார். ஆனால் இதற்கு அவருடைய அண்ணன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, அம்மாபேட்டை காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் வழங்கியிருக்கிறார்கள்.
இந்த புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில், நேற்று முன்தினம் இரவும் இந்த சொத்து தகராறு காரணமாக, ராஜ கணபதி தகராறு ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில், நேற்று காலை வீட்டின் கீழ் தளத்தில் தலை நசுங்கி நிலையில், ரத்த வெள்ளத்தில் சடலமாக ராஜகணபதி கிடந்திருக்கிறார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, ராஜகணபதியின் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அம்மாபேட்டை காவல் துறையினர் கொலை செய்தது யார்? சொத்து தகராறு காரணமாக, அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.