fbpx

முன்பகை காரணமாக படுகொலை செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்! சொந்த அண்ணன் மகன் அதிரடி கைது!

கிராமப்புறங்களில் எப்போதும் சொந்த, பந்தங்களுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்வதுதான் நிறைவான வாழ்க்கை என்ற ஒரு மனநிலை எப்போதும் இருக்கும்.ஆனால் அதே சொந்த பந்தத்திற்குள் பகை என்று வந்து விட்டால் அவர்களுக்குள் இருக்கும் உறவுகள் அனைத்தும் மறைந்து பகை மட்டுமே தலை விரித்தாடும்.அப்படி ஒரு சம்பவம் தற்போது திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்துள்ள அறையூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார் பன்னீர்செல்வம்(55). இவர் மதுப்பழக்கம் உள்ளவர் என்று சொல்லப்படுகிறது. ஆகவே அவர் மதுவை சாப்பிட்டு கொண்டு இருந்த சமயத்தில், அந்த பகுதிக்கு வந்த மர்ம நபர் ஒருவர் பன்னீர்செல்வத்தை சரமாரியாக வெட்டியுள்ளார்.

சித்தியை பழிவாங்குவதாக நினைத்து ஆள்மாறாட்டத்தில் பாட்டியை வெட்டிக்கொன்ற வாலிபர் கைது..!

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த பன்னீர்செல்வம் ரத்த வெள்ளத்தில் சரிந்தார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை உடனடியாக மீட்டு அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த சூழ்நிலையிலும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த காவல் துறையினர் பன்னீர்செல்வத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பாலியல் தொழிலில் சம்பாதித்த பணத்தை பங்கு போடுவதில் தகராறு..! இளைஞரை கொல்ல முயன்ற இருவர் கைது..!

இந்த கொலை குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் முன் விரோதம் காரணமாக, ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வத்தின் அண்ணன் மகனே அவரை கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது..

பன்னீர்செல்வத்தை கொலை செய்த அவருடைய அண்ணன் மகன் விஜய் கொலை செய்த ஆயுதத்துடன் காவல் நிலையத்தில் வந்து தானே காவல்துறையினரிடம் சரணடைந்தார். இந்த கொலை தொடர்பாக வலங்கைமான் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றன.

Next Post

அதிரடி அறிவிப்பு..!! ட்விட்டரில் ப்ளூ டிக் கட்டணம் குறைப்பு...? எவ்வளவு தெரியுமா..? பயனர்கள் மகிழ்ச்சி..!!

Thu Dec 8 , 2022
ட்விட்டரில் ப்ளூ டிக் பெறுவதற்கான கட்டணத்தை குறைக்க எலான் மஸ்க் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்து பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறார். முன்னதாக, ப்ளூ டிக் பெற 4 டாலர் அளவிலான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் செலவுகள் அதிகமாகவும், வருவாய் குறைவாகவும் இருப்பதால் ப்ளூ டிக் பெறுவதற்கான கட்டணத்தை 20 […]
’நான் பதவி விலக வேண்டுமா’..? ட்விட்டரில் கருத்துக் கணிப்பு கேட்கும் எலான் மஸ்க்..!

You May Like