விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்சமயம் ஐஸ்வர்யா ரோலில் நடிக்க தொடங்கியுள்ளார். வி ஜே தீபிகா அவர் ஏற்கனவே அந்த தொடரில் அதே கதாபாத்திரத்தில் நடித்து பாதியில் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்சமயம் அவர் மீண்டும் அந்த சீரியலுக்கு திரும்பி உள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தற்போது உடைந்து அனைவரும் தனித்தனியாக சென்று விட்டார்கள். இதற்கு முக்கிய காரணமாக இருந்தது ஐஸ்வர்யா கதாபாத்திரம்தான்.
தற்சமயம் தீபிகா சமீபத்தில் வழங்கிய பேட்டி ஒன்றில் தான் நடிக்க வந்த புதிதில் சந்தித்த காஸ்டிங் கோச் பிரச்சினைகள் தொடர்பாக பேசி உள்ளார். ராகவா லாரன்ஸ் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கும் ரோல் என்று சொல்லி ஆடிஷனுக்கு அழைத்தார்கள். அங்கு போனால் ஒரு அறையில் ஒரு நபரை தவிர வேறு யாருமே இல்லை, அந்த ரோலுக்கு படத்தில் முத்த காட்சி இருக்கிறது, அதனை தற்போது செய்து காட்ட வேண்டும் என்று கேட்டார்.
ஆனால் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்து வேறு கதாபாத்திரம் இருந்தால் சொல்லுங்க என்று கேட்டபோது, இதற்கு முன்னர் 8 பெண்கள் வந்து கிஸ் பண்ணிட்டு போயிருக்காங்க உங்களுக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார். இப்படி வெளிப்படையாக பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் கேட்கிறார்கள் என்றது தீபிகா தெரிவித்துள்ளார்.