fbpx

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்ட கிராம வருவாய் ஆய்வாளர்! கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை பெரம்பலூர் அருகே பரபரப்பு!

மத்திய அரசாக இருந்தாலும் சரி அல்லது மாநில அரசாக இருந்தாலும் சரி ஒவ்வொரு தேர்தலின் போதும் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எந்த துறையிலும் ஊழல் மற்றும் லஞ்சம் உள்ளிட்டவை இருக்காது என்று வாக்குறுதி வழங்குவதற்கு மறப்பதில்லை.

ஆட்சியாளர்கள் என்ன தான் இப்படி பொதுமக்களிடம் வாக்குறுதியை வழங்கினாலும், அதிகாரிகள் அதனை பின்பற்ற நினைப்பதில்லை. இதன் காரணமாக, அரசியல்வாதிகள் யாரும் பாதிக்கப்படுவதில்லை, சாதாரண மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.

அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டம் டீ களத்தூர் அருகே உள்ள தேனூர் கிராமத்தைச் சார்ந்த ராஜா என்பவரின் மனைவி இந்திராணி(35). இவர் கொளக்காநத்தம் பகுதி வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில், அய்யர் குடிக்காடு கிராமத்தைச் சார்ந்த முருகானந்தம் என்பவரின் மனைவி முத்தரசி(30) என்பவர் பட்டா பெயர் மாறுதலுக்காக மனு வழங்கியிருந்தார். அந்த சமயத்தில் அந்த மனு மீது விசாரணை நடத்தி பட்டா மாறுதல் வழங்குவதற்காக வருவாய் ஆய்வாளர் இந்திராணி 20000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் இதனால் அதிர்ச்சியடைந்த தமிழரசி லஞ்சம் கொடுக்க விரும்பாமல் பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினரை அணுகியிருக்கிறார். லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ஹேமச்சித்ரா தலைமையிலான குழுவினரின் ஆலோசனையின் அடிப்படையில் முத்தரசி ரசாயனம் தாவப்பட்ட ரூபாய் நோட்டுக்களை இந்திராணி இடம் வழங்கியபோது கையும், களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் பிடிபட்டுள்ளார்.

இது தொடர்பாக இந்திராணியிடம் தொடர்ச்சியாக விசாரணை நடந்து வருகிறது. லஞ்சம் வாங்கி பிடிபட்டுள்ள வருவாய் ஆய்வாளர் இந்திராணி கடந்த 10 வருட காலமாக கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து, கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் வருவாய் ஆய்வாளராக பதவி உயர்வு அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் வருவாய் ஆய்வாளர் ஒருவர் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்டிருக்கின்ற சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

சொத்துக்கு ஆசைப்பட்டு கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனையே தீர்த்து கட்டிய மனைவி! அதிர்ச்சியில் உறைந்த காவல்துறையினர்!

Sat Dec 10 , 2022
தொலைக்காட்சிகளில் ஒரு மெகா தொடர் ஒளிபரப்பாகிறது என்று சொன்னால் தாய்மார்கள் தங்களுடைய தலையில் இடியே விழுந்தாலும் அந்த இடத்தை விட்டு நகர மாட்டார்கள். அந்த அளவிற்கு தாய்மார்களின் வாழ்வோடு இந்த மெகா தொடர்கள் ஒன்றிப்போய்விட்டது. ஆனால் இப்படிப்பட்ட மெகா தொடர்களை பார்த்து கட்டிய கணவனையே கொலை செய்யும் அளவிற்கு ஒரு பெண் துணிந்து இருக்கிறார். இப்படியான ஒரு சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்திருக்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருக்கின்ற கல்யாணப்பூர் சிபிலி […]
கள்ளக்காதலுக்கு இடையூறு..!! கணவர் கொலை..!! உடலை புதைத்த இடத்தில் செப்டிக் டேங்க்..!! பகீர் சம்பவம்..!!

You May Like